புதன், 1 அக்டோபர், 2008

மாபெரும் இப்தார் விருந்து






கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஜைதா மேம்பாலம் அருகே அமைந்துள்ள பள்ளிவளாகத்தில் கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் கத்தர் செம்பிரை அமைப்பும் இனைந்து ஏற்பாடு செய்திருந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.QITC தலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்கள்
தலமையேற்று நடத்தினார்கள். கத்தரின் பல பாகங்களிருந்தும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர் . அந்நிகழ்வின் போது தேவி என்கிற மற்றுமத சகோதரி இஸ்லாத்தை தழுவினர். அவருக்கு மௌலவி தவ்பிஃக் மதனீ அவர்கள் கலிமா மொழிந்து மர்யம் என்று பெயர் சூட்டினார் . மக்ரிப் தொழுகைக்கு பின்னர் உணவுக் குழு அனைவருக்கும் உணவை பரிமாறினார்கள் . அத்திடலில் தவ்ஹீத் புத்தக கண்காட்சியும் அமைக்கப் பட்டிருந்தது . ஏராளமானோர் புத்தம் புதிய தலைப்புகளில் வந்திருந்த நூல்களை வாங்கி சென்றனர். இம்மாபெரும் இப்தார் விருந்திற்கு முக்கிய உதவி நல்கியோர் Qatar Red Crescent, Qatar Charity மற்றும் Eid Bin Charity ஆகிய நிறுவனங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார் செயலாளர் மஸ்ஊத். மேலும் ஒலி ஒளி ,அரங்க அமைப்பு , மற்றும் புத்தக கண்காட்சி யை சிறப்பாக செய்திருந்த தன்னார்வ சகோதரர்களுக்கு நன்றி பாராட்டினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவர்க்கும் , வெற்றியாக்கி தந்த எல்லா வல்ல இறைவனுக்கும் நன்றி நவின்றார் . அல்ஹம்துலில்லா !