வியாழன், 18 டிசம்பர், 2008

இரத்தத் தான முகாம்











சென்ற வியாழக்கிழமை 11-12-2008 அன்று கத்தரில் இரத்த தானா முகாம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டுகளை கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் ஹமாத் மெடிக்கல் நிறுவனமும் இணைந்து நடத்தியது. மதியம் இரண்டு மணி முதல் தொடங்கிய இம் முகாமில் , இரத்த தானம் செய்ய முதலாவதாக பெண்கள் தங்களது குடும்ப அங்கத்தினர்களுடன் வருகை தந்திருந்தனர் . பின்னர் ஐந்து மணிக்கு மேல் , தோகாவின் அனைத்து பகுதிகளிலுருந்தும் குறிப்பாக ,
அல் மில்லியன் கேம்ப் சகோதரர்கள் , அல் கோர் கிளை சகோதரர்கள் , ராஸ்லபான் கிளை சகோதரர்கள் , நஜ்மா கிளை சகோதரர்கள் , வக்ரா கிளை சகோதரர்கள் , பின் மெஹ்மூத் கிளை சகோதரர்கள் , நியூ தோஹா ஏர்போர்ட் கிளை சகோதரர்கள் , மேலும் ரய்யான் , உம்சளால்அலி , சனையா ஆகிய பகுதிகளிளுருந்தும் இந்திய இலங்கையை சேர்ந்த பல தன்னார்வ தொண்டுள்ளம் மிக்க சகோதரர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர் . இம்முகாமில் பல மாற்று மத சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். குருதி கொடைகொடுத்த இச்சகோதரர்களுக்கு அல் குரான் தமிழ் மொழி பெயர்ப்பு இலவசமாக வழங்கப்பட்டது . நூறுக்கு மேல் பட்ட சகோதரர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஐம்பதுக்கு மேற்ப்பட்ட சகோதரர்கள் இரத்த தானம் செய்தனர் .
சமுதாய சேவையில் என்றும் அல்லாஹுவின் அருளால் QITC யின் பணிகள் கத்தர் வாழ் மக்களிடையே சிறந்து விளங்க பிரார்த்திப்போமாக.