வியாழன், 18 டிசம்பர், 2008

கத்தர் கெஸ்டு சென்டரில் சிறப்பு நிகழ்ச்சி






கடந்த வெள்ளிக்கிழமை 12-12-2008 அன்று கத்தர் கெஸ்டு சென்டரில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கத்தர் கெஸ்டு சென்டரின் தமிழ் பிரிவு தாயீ சகோதரர் மௌலவி முனாப் அவர்கள் தலைமை தங்கினார்கள் . தமிழகத்திலிருந்து வருகை தந்த அப்பாஸ் அலி அவர்கள் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு குரான் ஹதீஸ் அடிப்படையில் விளக்கமளித்தார்கள் . இறுதியாக கத்தர் கெஸ்டு சென்டரின் தலைவர் , நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்றுமத சகோதரர்களுக்கு இலவச இஸ்லாமிய நூல்கள் அடங்கிய அன்பளிப்பு பேழையினை வழங்கினார்.