செவ்வாய், 28 ஜூலை, 2009

ரமலான் சிறப்பு ஆலோசனைக்கூட்டம்













கடந்த வெள்ளிகிழமை மக்ரிப் தொழுகைக்கு பின்பு கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் ரமலான் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
வருகை பதிவு:
வருகை தந்த அணைத்து செயல் வீரர்களின் பெயர் , கிளை தொடர்பு எண் ஆகியவைகளை துணை செயலாளர்கள் சகோ ஷாஜகான் & சகோ ஜியாவுதீன் பதிவு செய்தார்கள்.
வரவேற்புரை
செயலாளர் மசூத் அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி துவங்கியது.
சிறப்பு பயான்
நிகழ்ச்சியின் துவக்கத்தில் "ஏகத்துவாதிகளிடம் இருக்கவேண்டிய இறையச்சம்" என்ற தலைப்பில் சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
தலைமை
கத்தர் இந்திய மையத்தின் தலைவர் சகோதரர் ஷபீர் அவர்கள் தலைமை ஏற்று கூட்டத்தை நடத்தினார்கள்.
மூத்த தலைவர் உரை
பின்னர் மூத்த தலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்களின் சுருக்க உரையின் வந்திருந்த செயல் வீரர்களுக்கு உற்சாகமூட்டும் வண்ணம் " நாமெல்லாம் களத்தில் நிக்கிற போராளிகள் " , நன்மையை ஏவி தீமையை தடுத்துக்கொண்டு இருக்கவேண்டும் என்றார் .
நிகழ்ச்சியின் அம்சங்கள்.
துணை செயலாளர் அப்துல் கபூர் அவர்கள் அன்றைய நிகழ்ச்சியின் அம்சங்களை விளக்கினார் . குறிப்பாக எதிர் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இன்ஷா அல்லாஹ் நடைபெற இருக்கின்ற "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் " எப்படி அமைய வேண்டும் என்ற ஒழுங்குகளை எல்லாரும் எளிதாக புரியும் வண்ணம் கூறினார் . வருகின்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற பல்வேறு குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது . அவையாவன விளம்பர குழுவில் ,இக்குழுவில் 14 செயல் வீரர்கள் இடம்பெற்று இருக்கின்றனர் .வாகன குழுவில் , இக்குழுவில் 4 செயல் வீரர்களும் , உணவு ஏற்பாட்டு குழுவில் 4 பேரும் , ஒலி ஒளி அமைப்பு குழுவில் 6 பேரும் , ஊடகக்குழுவில் மூவரும் செயல் பட முன்வந்து இருக்கின்றார்கள்
இக்குழுக்களை முறையாக துணை பொருளாளர் சகோ பீர் முஹம்மது அவர்கள் பதிவு செய்து க்கொண்டார்கள்.

மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் , கலந்து கொள்ளும் மாற்று மத சகோதரர்களுக்கு திரு குர்ஆன் மொழியாக்கத்தை அன்பளிப்பாக வழங்க அவையினர் பலர் ஆர்வமுடன் முன்வந்து பெயர் கொடுத்தனர். மாற்றுமத சகோதரர்கள் கேட்டுக்கும் தலைப்பில் புத்தகங்கள் வழங்கவும் ,DVD, CD க்கள் வழங்கவும் பல சகோதரர்கள் தங்களுடைய பங்களிப்பை பதிவு செய்தனர்.
நன்றியுரையுடன் துவா ஓதி கூட்டம் நிறைவு பெற்றது . அல்ஹம்துலில்லாஹ்.
--------------------------------------------------------------------------------------------
"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் !
அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !"
அல்குரான் 3:௧௰
----------------------------------------------------------------------------------------------