சனி, 11 ஜூலை, 2009

ஒரே பந்தலில் நூறு விதவை பெண்களுக்கு மறுமணம்


கடந்த 2008 டிசம்பர் 24 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை தொடர் குண்டு மழை பொழிந்து எராளமான பொருள் நாசத்தையும் உயிர் சேதத்தையும் பாலஸ்தீனியர்கள் மீது கட்டவிழ்த்தது உலக உயிர் கொல்லியான இஸ்ரேல். பாலஸ்தீனியர்கள் வசமுள்ள காசா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டி தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1450 க்கும் மேல்பட்டோர் என்று காசாவில் நிலை கொண்டிருக்கும் உலக மனித உரிமை கழகம் தெரிவித்திருக்கிறது. 22 நாட்கள் நடைபெற்ற இஸ்ரேலின் இராணுவ வெறியாட்டத்தால் நூற்றுக்கும் மேல்பட்ட பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர் , குழந்தை அநாதைகளாக்கப்பட்டனர். இவ்வாறு பாதிகப்பட்டவர்களை பராமரிக்கவும் அவர்கள் வாழ்வில் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தவும் இஸ்லாம் காட்டிதந்த பெண்கள் மறுவாழ்வு திட்டத்தை கையில் எடுத்தது ஹமாஸ் போராளி இயக்கம். சென்ற வாரம் காசாவில் ஒரே பந்தலில் நூறு விதவை பெண்களுக்கு மறுமணம் நடத்தி வைத்தது ஹமாஸ் இயக்கம். நூறு விதவைகளும் மணப்பெண் கோலம் பூண்டு தங்களுடைய இரண்டாவது திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள். அந்த நூறு பெண்களில் பெரும்பான்மையினர் 25 வயது கடந்தவர்கள். சுற்றாரும் உறவினரும் சூழ கலந்து கொண்டு அவர்கள் பிள்ளைகளுடன் மனபந்தலில் காணப்பட்டனர். விதவைக்கு வாழ்வளிக்க முன் வந்த நூறு மாப்பிளைகளுக்கு 2800 டாலர்களை ஊக்கதொகையாக வழங்கியது ஹமாஸ்.

----------------------------------------------------------------------------------------------
"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !" அல் - குர்ஆன் 3:110
-------------------------------------------------------------------------------------------------