வெள்ளி, 31 ஜூலை, 2009

இலங்கை பேருவளையில் தவ்ஹீத் பள்ளியில் நடந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறது QITC

இன்று இரவு வியாழக்கிழமை நடைப்பெற்ற வாராந்திர பயானில் மொளலவி லாபிர் அவர்கள் " பாராத் இரவும் மத்ஹப்களும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
கத்தரில் முக்கிய தொழில் நகரமான ராஸ்லாபான் என்ற இடத்தில பணிபுரியும் திருவாரூரை சேர்ந்த கண்ணன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தழுவினார்.


அவருக்கு,மௌலவி முஹம்மது அலி அவர்கள் , இஸ்லாத்தின் கடவுட் கொள்கைகளை விளக்கி கூறி, கலிமா சொல்லிக்கொடுத்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள செய்தார். பயானில் கலந்து கொண்டவர்களின் முன்னிலையில் " அச் சகோதரர் " தான் ஆறு வருடங்களாக இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டும் பல்வேறு பொது பயான்களில் கலந்து கொண்டு உரைகளை செவிமடுதிருப்பதாகவும் ," குறிப்பாக பண்டாரவடையில் வரதட்சணை ஒழிப்பு உரைகளை கேட்டதுமுதல் தனது உள்ளம் மாற்றம் கொண்டதையும் கூறினார். இன்ஷா அல்லாஹ் தன்னுடைய குடும்பத்தார்களுக்கு இஸ்லாத்தை எடுத்து கூறி இத்தூய கொள்கையில் இணைக்க செய்வேன் என்று கூறினார் .
இறுதியாக இலங்கை பேருவளையில் தரீகா கும்பல் தவ்ஹீத் பள்ளிக்குள் நுழைந்து காட்டுமிராண்டி தனமான தாக்குதலை நடத்தி பல சகோதர்களை கண்மூடித்தனமாக தாக்கி , இரண்டு நபர்களை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி சாய்த்து ஷகீத் ஆக்கபட்டிருகிறார்கள். அல்லாஹ்வின் ஆலயத்தில் அல்லாஹ்வின் பெயரல்லாமல் வேறு ஒன்றினை அழைக்கக்கூடாது என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டிருக்க , இணை கற்பிக்கும் காரியங்களில் மூழ்கிவிட்ட கும்பல் சத்தியத்தை எடுத்துரைத்த சகோதரர்களின் மேல் கொலை வெறி தாக்குதலை நடத்திஇருக்கின்றது. பள்ளிவாயில்குள்ளே இஸ்லாத்தின் எதிரி கூட செய்ய துணியாத இத்தகைய வெறி செயலை முஸ்லிம் பெயர் தாங்கிகள் நடத்திக்காண்பித்து இருகிறார்கள். இத்தாக்குதலை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் வன்மையாக கண்டிப்பதோடு , நிதானத்தோடும் விவேகத்தோடும் வருங் காலங்களில் இன்ஷா அல்லாஹ் நெஞ்சுரத்தோடு தவாவின் வேகத்தை முடிக்கிவிட வேண்டும் என்று மையத்தின் தலைவர் சகோதரர் ஷபீர் அகமது கூறினார் .

---------------------------------------------------------------------

"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !"

அல்குரான் 3:110