சனி, 19 செப்டம்பர், 2009

இப்தார் நிகழ்ச்சி 2009




கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் , கத்தர் வாழ் தமிழ் முஸ்லிம்களுக்காக நேற்று 18/09/2009 வெள்ளிக்கிழமை பொது இப்தார் நிகழ்ச்சி ஒன்றை , அபூபக்கர் தனியார் மேல் நிலை பள்ளியில் ஏற்பாடு செய்து இருந்தது. சரியாக மாலை ஐந்து மணிக்கு மாநில தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் ஒலி ஒளி கலந்தாய்வு ( video conferencing ) மூலம் தலைமையகம் சென்னையிலிருந்து " ரமலான் நம் மீது ஏற்படுத்திய மாற்றம் என்ன ? " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். நோன்பு திறப்பத்தற்க்கான பேரீச்சம் பழம் , தண்ணீர் , ஜுஸ் ஆகியவைகள் நுழைவாயிலில் கொடுக்கப்பட்டது . நோன்பு திறந்தவுடன் , மக்ரிப் தொழுகையை சகோதரர் மௌலவி அன்சார் அவர்கள் நடத்தினார்கள் . பின்னர் வந்திருந்த அனைவருக்கும் , உணவு பரிமாறப்பட்டது. முப்பதுக்கும் மேற்பட்ட செயல் வீரர்கள் இப்தார் அரங்கத்தை அமைக்கும் பணியிலும் , உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறும் பணியிலும் சிறப்பாக செய்தனர் . அரங்கத்தின் அனைத்து துப்புரவு பணிகளையும் ICC நிறுவனம் சிறப்பான முறையில் செய்தது.இந்நிகழ்ச்சியில் எந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதர சகோதிரிகள் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் இலவச சிடிக்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சி சிறப்பாக நடத்திதந்த அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும். அல் ஹம்துலில்லாஹ்!



"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"
அல்குரான் 3:110

சனி, 12 செப்டம்பர், 2009

அல்கோர் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி






வியாழன் இரவு 10-09-2009 அன்று தோஹாவின் அடுத்த பெரிய நகரமான அல்கோர் என்னுமிடத்தில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் அல்கோர் கிளை , இந்நிகழ்ச்சியை அல்கோர் ஸ்போர்ட்ஸ் கிளப் உள் விளையாட்டு அரங்கில் ஏற்ப்பாடு செய்த்திருந்தனர். முதலாவதாக சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் " ரமலானில் தர்மம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர் மௌலவி லாயிக் அவர்கள் " பவ மன்னிப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்ததாக மௌலவி லாபிர் அவர்கள் " ரமலான் ஏற்ப்படுத்திய மற்றம் என்ன ? என்ற தலைப்பில் உரையாற்றினார் .

இறுதியாக மௌலவி முனைப் அவர்கள் இரவுத்தொழுகையின் அவசியம் என்ன ? தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியை சகோதரர் தும்பச்சி மீரான் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.


நிகழ்ச்சி ஏற்பாட்டை அல் கோர் கிளை ஒருங்கினைபாளர்களான சகோதரர் இணையத்துல்லாஹ மற்றும் சகோதரர் நூருல்அமீன் அவர்கள் முன்னின்று செய்தார்கள்.

சொற்பொழிவு இறுதியில் மௌலவி முஹம்மது அவர்களும் மௌலவி பைசல் அவர்களும் இரவுத்தொழுகை நடத்தினார்கள். சஹர் உணவு ஏற்பாட்டை சகோதரர் ஜாபர் , சகோதரர்அபுதாகிர் , சகோதரர் ஹாஜி முஹம்மது அவர்களும் சிறப்பாக செய்தார்கள்.அல்கோர் சுற்று வட்டாரத்தில் வசித்துவரும் தமிழறிந்த சகோதர்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியின் முடிவில் அல்கோரில் தமிழறிந்த அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் , பல புதிய சகோதரர்கள் தங்களும் ஜாமத்தில் இணைத்துக்கொண்டு செயல்பட அர்வமுள்ளதாக மண்டல நிர்வாகிகளிடம் கூறினர்.பஜர் தொழுகைக்கு பின்னர் அல்கோர் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சகோதரர் நவாஸ் ( பேட்டை) அவர்கள் பொறுப்பாளர் , சகோதரர் நவாஸ் ( நாகூர் ) அவர்கள் துணை பொறுப்பாளர் , சகோதரர் ஹமீது ( ராஜகிரி ) அவர்கள் துணை பொறுப்பாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய அல் கோர் கிளை தேர்ந்தெடுப்பில் , QITC தலைவர் சகோதரர் ஷபீர் அவர்களும் செயலாளர் மசூத் அவர்களும், துணை செயலாளர்கள் சகோதரர் அப்துல் கபூர் , மற்றும் ஹாஜி முஹம்மது , ஜியாவுதீன் அவர்களும் உடன் இருந்தார்கள்.



"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"
அல்குரான் 3:110

உம்ரா சென்ற குழுவினர் இஹ்ரம் உடையுடன்



அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் ,கத்தர் இந்திய மையத்தின் மார்க்க பேச்சாளார் சகோதரர் முஹம்மது அலீ அவர்கள் வழிக்காட்டுதலுடன் ஐம்பது பேர் கொண்ட உம்ரா பயணக்குழு கத்தாரிலிருந்து சென்றது. உம்ரா சென்ற குழுவினர் இஹ்ரம் உடையுடன் இருப்பதை க்காணலாம் . நபி வழிப்படி உம்ராவில் செய்ய வேண்டிய எல்லா கிரியைகளையும் சிறப்பாக செய்து முடித்தனர்.
--------------------------------------------------------------------------------------
மக்காவிலிருந்து MMS மூலமாக தகவல் அளித்தவர் சகோதரர் முஹம்மது அலீ. 11-09-2009

வியாழன், 10 செப்டம்பர், 2009

இப்தார் நிகழ்ச்சி 2009 (அழைப்பு)



இன்ஷா அல்லாஹ் வரும் 18-09-2009 வெள்ளிக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்தும் மாபெரும் இப்தார் விருந்து . உங்கள் உற்றார் உறவினர் நண்பர்களோடு , மாற்று மதநண்பர்களையும் அழைத்து வாருங்கள் . பூவையருக்கு தனி இட வசதி உண்டு .
நேரம் : சரியாக ஐந்து மணி
இடம் : அபூ பக்கர் அஸ்சித்திக் பள்ளிக்கூடம்
முந்தாஜா பார்க் அருகில்

மாபெரும் இப்தார் விருந்து நடக்கும் அபூ பக்கர் அஸ் சித்திக் பள்ளிகூட உள் விளையாட்டு அரங்கத்திற்கு வழி காண்பிக்கும் வரைபடம் .
அன்புடன் அழைக்கிறது
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

அல்கோர் ஸஹர் நேர நிகழ்ச்சி (அழைப்பு)

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......

இன்ஷா அல்லாஹ் வரும் வியாழன் கிழமை 10-09-2009 அன்று


அல்கோர்
ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கம் ஸஹர் நேர நிகழ்ச்சி.
நிகழ்ச்சி நிரல்
தலைமை : சகோதரர் நூருல் அமீன்
நிகழ்ச்சி துவக்கம் : சரியாக 10:30 மணிக்கு

சகோதரர் முஹம்மது யூசுப்
தலைப்பு : ரமலானில் தர்மம் ( 10:45 - 11:15)

சகோதரர் முஹம்மது லாயிக்
தலைப்பு : பாவ மன்னிப்பு ( 11:20-11:55)

சகோதரர் முஹம்மது லாபிர்
ரமலான் ஏற்படுத்திய மாற்றம் என்ன ? ( 12:00-12:40)

சகோதரர் முனாப்
இரவு தொழுகையின் சிறப்பு (12:40-1:25)


நன்றியுரை : சகோதரர் நைனா முஹம்மது

இரவு தொழுகை ( கியாமுலைல் ) நடத்தப்படும் ( 1:30 - 2:15)

ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

பெண்களுக்கான தனி இட வசதி உண்டு.
அறிவு போட்டியை நடத்துபவர்
சகோதரர் மௌலவி அன்சார் அவர்கள்
ஒவ்வரு சொர்பொழிவுக்குமிடையே கேள்விகள் கேட்கப்பட்டு , சரியான பதில் அளிப்பவர்களுக்கு இஸ்லாமிய நூல்கள் பரிசாக வழங்கப்படும்.
----------------------





مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
QATAR INDIAN THOWHEED CENTRE
POST BOX NO:31579
DOHA-QATAR.
00974 4315863
qitcdoha@gmail.com
For More info Please visit
www.qatartntj.blogspot.com

திங்கள், 7 செப்டம்பர், 2009

QITC ரமலான் கோப்பை 2009





இறுதியாக இஸ்லாமிய அறிவு போட்டியில் வென்ற முதல் மூன்று நிலைகளுக்கு "QITC ரமலான் கோப்பை" வழங்கப்பட்டது. மேலும் பல ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.



பின்னர் கத்தார் இந்திய தவ்ஹீத் மையத்தில் ,சகோதரர் மௌலவி நஜ்முல் ஹுசைன் நடத்திய "இஸ்லாமிய அடிப்படை கொள்கை " ( அகீதா ) வகுப்பில் (மூன்று மாத படிப்பு) தேர்ச்சி பெற்ற சகோதர சகோதரிகளுக்கு பட்டயம் வழங்கப்பட்டது.
From saudi markas sagar prg 030909

From saudi markas sagar prg 030909

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

சவுதி மர்கசில் ஸஹர் நேர நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவு



கடந்த வியாழன் அன்று சவுதி மர்கசில் , ஸஹர் நேர நிகழ்ச்சியில் , குழந்தைகளுக்கான இஸ்லாமிய அறிவு போட்டி நடந்து முடிந்த பின்னர் , மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவு நடைபெற்றது. முதலாவதாக மௌலவி லாயிக் அவர்கள் " வெட்கம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.



இரண்டாவதாக மௌலவி முஹம்மது அலீ அவர்கள் " சுத்தம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . இறுதியாக "பொறுமை" என்ற தலைப்பில் சகோதரர் லாபிர் மதனீ அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



நானூறுக்கும் சகோதரர்கள் சகோதிரிகள் கலந்து " கொண்டு " பயனடைந்தார்கள்





சனி, 5 செப்டம்பர், 2009

குழந்தைகளுக்கான இஸ்லாமிய அறிவு போட்டி


03-09-09 வியாழன் இரவு ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் , மதீனா-கலிபாவில் அமைந்துள்ள சவுதி மர்கசில் ,இரவு 10:30 மணிக்கு துவங்கியது.இந்நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் நடத்தி வைத்தார்கள்.
நிகழ்ச்சியின் முன்னராக , குழந்தைகளுக்கான இஸ்லாமிய அறிவு போட்டியை சகோதரர் மௌலவி முஹம்மது அலீ அவர்கள் நடத்தினார்கள் .இப்போட்டிக்கு , ஆறு வயதுக்குட்டபட்ட சிறுவர் சிறுமியர் ஒரு பிரிவாகவும் , பத்து வயதுக்குட்டபட்ட சிறுவர் சிறுமியர் மற்றொரு பிரிவாகவும் , பதினாலு வயதுக்குட்டபட்ட சிறுவர் சிறுமியர் மூன்றாவது பிரிவாகவும் வகைபடுத்தபட்டிருந்தனர். இப்போட்டியில் கலந்து கொள்ள முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெயர் பதிவு செய்திருந்தனர்.


இப்போட்டிகளை சகோதரர் முஹம்மது அலி அவர்கள் , குழந்தைகளிடம் கேள்வி கேட்டு , இஸ்லாத்தில் அறிய வேண்டிய பல எளிய விசயங்களை சிறுவர் சிறுமியர் மூலமாக பார்வையாளர்களை அறிய தந்த விதம் வெகுவாக கவர்ந்தது. இப்போட்டியில் மதீப்பீட்டர்களாக மௌலவி அன்ஸார் அவர்களும் ,மௌலவி அசலம் அவர்களும் சகோதரர் பீர் முஹம்மது அவர்களும் செயலாற்றினார்கள்.

வியாழன், 3 செப்டம்பர், 2009



நமது மர்கஸில் , உங்களுக்கு தேவையான மார்க்கநூல்கள் , பல் வேறு தலைப்பிலான மார்க்க சொற்பொழிவு சிடிக்கள் கிடைக்கிறது மற்றும் குறிப்பிட்ட தலைப்புகளில் உங்கள் கைபேசியில் பதிவுவிறக்கம் செய்துகொள்ள ஏதுவான MP3 , 3GP கோப்புகளில் இலவசமாக பதிவுவிறக்கம் செய்துக்கொள்ளவும்

வியாழன் இரவு சிறப்பு பயான்






09-07-2009 அன்று வியாழன் இரவு நடந்த சிறப்பு சொற்பொழிவில் சகோதரர் மௌலவி ழாfஇர் மதனி அவர்கள் " குர் ஆன் இறக்கப்பட்ட வரலாறு " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள் .
பின்னர் மொளலவி முஹம்மது அலி அவர்கள் " பெண்களுக்கு இஸ்லாம் கூறும் அறிவுரை " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள் . தோஹாவின் பல பாகங்களிலுருந்தும் பல சகோதர சகோதரிகள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள். வாராவாரம் நடந்து க்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சிகளில் எல்லாரும் கலந்துக்கொள்ள அழைப்புவிடுக்கப்பட்டது.
-----------------------------------------------------------------------------------------------
"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !"
அல்குரான் 3:௧௧0
-----------------------------------------------------------------------------------------------

10-09-2009 அன்று அல்கோர் ஸஹர் நேர நிகழ்ச்சி. (அழைப்பு)

பிஸ்மில்லாஹ்

இன்ஷா அல்லாஹ் வரும் வியாழன் கிழமை 10-09-2009 அன்று அல்கோர்

ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கம் ஸஹர் நேர நிகழ்ச்சி.

நிகழ்ச்சி நிரல்

தலைமை : சகோதரர் நூருல் அமீன்

நிகழ்ச்சி துவக்கம் : சரியாக 10:30 மணிக்கு

சகோதரர் முஹம்மது யூசுப்

தலைப்பு : ரமலானில் தர்மம் ( 10:45 - 11:15)

சகோதரர் முஹம்மது லாயிக்

தலைப்பு : பாவ மன்னிப்பு ( 11:20-11:55)

சகோதரர் முஹம்மது லாபிர்

ரமலான் ஏற்படுத்திய மாற்றம் என்ன ? ( 12:00-12:40)

சகோதரர் முனாப்

இரவு தொழுகையின் சிறப்பு (12:40-1:25)

நன்றியுரை : சகோதரர் நைனா முஹம்மது

இரவு தொழுகை ( கியாமுலைல் ) நடத்தப்படும் ( 1:30 - 2:15)

ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

பெண்களுக்கான தனி இட வசதி உண்டு.

புதன், 2 செப்டம்பர், 2009

சவுதி மர்கசில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி (அழைப்பு)


இன்ஷா அல்லாஹ்,
சவுதி மர்கசில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி
நாள் : வியாழன் இரவு 03-09-2009
நேரம் : இரவு 9:30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1:00 மணி வரை
நிகழ்ச்சி நிரல்
சிறுவர்களுக்கான இஸ்லாமிய அறிவு போட்டி 9:30 - 10:30
தலைமையுரை :சகோதரர் முஹம்மது யூசுப் 10:00-10:25 வரை
சிறப்பு உரை :வெட்கம்
சகோதரர் முஹம்மது லாயிக் 10:30-11:10 வரை
சிறப்புரை : ஆசை
சகோதரர் முஹம்மது அலீ 11:15 - 12:00 வரை
சிறப்புரை ;பொறுமை
சகோதரர் முஹம்மது லாபிர் 12:00-12:40 வரை
பரிசு வழங்குதல்
நிறைவுரை : சகோதரர் அப்துல் கபூர்
ஸஹர் நேர உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
குழந்தைகள் பெண்களுக்கான தனி இட வசதி உண்டு
வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .தொடர்புகொள்க 5424109
அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு அழைக்கிறோம்.