வெள்ளி, 25 ஜூன், 2010

அகீதாவகுப்பில் முதல்ஆறு இடத்தில்தேறியவர்களுக்கு பரிசளிப்புவிழா



بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......


24-06-2010 அன்று வியாழக்கிழமை இரவு , கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் அகீதா வகுப்பில் முதல் ஆறு இடத்தில் தேறியவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது .
பரிசளிப்பு விழாவிற்கு , இஸ்லாமிய அழைப்பு மையமான சவுதி மார்கஸ் என்று அழைக்கப்படும் தாவா வல் இர்ஷாத் ன் தலைவர் சகோதரர் ஷேக் பாவாஜ் அல் காமிதி அவர்களும் , கத்தர் கெஸ்ட் சென்டர் தாளாளர் சகோதரர் ஷேக் அல் மௌலா அவர்களும் வெளிநாட்டினர்க்கான அழைப்பு மையம் பானர் என்ற அமைப்பின் , தாவா ஒருங்கிணைப்பாளர் சகோதரர் டாக்டர் அலி இத்ரீஸ் அவர்களும் , நமது மையத்தின் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்து தந்தனர்.
அகீதா வகுப்பில் 90% மதிப்பெண்கள் பெற்ற முதல் ஆறு சகோதர சகோதரிகளுக்கு , கை கடிகாரமும் , நற் சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் அகீதா வகுப்பில் கலந்து கொண்ட 62 சகோதர சகோதிரிகளுக்கு , நற் சான்றிதழ் வழங்கப்பட்டது. இது போன்று பல் வேறு தாவாப்பணிகளை வருங்காலத்தில் தவ்ஹீத் மர்கஸ் சிறப்புற நடத்திட வேண்டும் என்று வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் கூறினார்கள். அல்லாஹுவுடைய மாபெரும் கிருபையால் இக்கூட்டம் சிறப்புற நடந்தேறியது. அல்ஹம்துளில்லாஹ் !


"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"அல்குரான் 3:110

அகீதா வகுப்பில் முதல் ஆறு இடத்தில் தேறியவர்களுக்கு பரிசளிப்பு விழா

 

அகீதா வகுப்பில் முதல் ஆறு இடத்தில் தேறியவர்களுக்கு பரிசளிப்பு விழா

"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"அல்குரான் 3:110
Posted by Picasa

செவ்வாய், 22 ஜூன், 2010

தமிழகத்தை சேர்ந்த மாற்று மத சகோதரர் சந்தானம் அவர்கள் இஸ்லாத்தை தழுவினார்


10-06-10 அன்று வியாழக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் வாரந்திர சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது . இந்நிகழ்ச்சியின் போது , தமிழகத்தை சேர்ந்த மாற்று மத சகோதரர் சந்தானம் அவர்கள் இஸ்லாத்தை தழுவினார் .

அவருக்கு சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்கள் கலிமா சொல்லிக்கொடுத்தார் . அப்துல்லாஹ்( இறைவனின் அடிமை ) என்ற பெயரே தான் விரும்புவதாகவும் , அதையே தான் சூட்டி கொள்வதாகவும் கூறினார் .

கத்தருக்கு வந்து இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டதாகவும் , தன்னுடன் பணிபுரியும் சக முஸ்லிம்கள் தொழுவதற்காக பள்ளிக்கு செல்லும் போது தான் மட்டும் தனித்து இருந்த நிலையில் , இஸ்லாமிய கடவுட் கொள்கையை பற்றி ஆழமாக அறிந்துக்கொள்ள விரும்பிய போது இஸ்லாமிய சகோதரர்கள் அளித்த பல் வேறு இஸ்லாமிய நூல்கள் தான் தனக்கு இஸ்லாத்தின் பால் ஈர்ப்பை ஏற்படுத்தியது என்று கூறினார் .

தான் இஸ்லாத்தை படித்து அறிந்து கொண்டது முதல் ,ஒரு கடவுள் தான் இருக்க முடியும் , மேலும் அந்த கடவுள் தான் இவ்வுலகை படைத்தான், இணை துணை இல்லாத அக்கடவுளை மட்டும் வணங்க வேண்டும் என்ற நம்பிக்கையை ஆழமாக தன்னுள்ளத்தில் ஏற்படுத்திக்கொண்டதாகவும் , இம்மார்க்கத்தை எடுத்துரைத்த அல்லாஹுவின் தூதர் முஹம்மது (ஸல் ) அவர்கள் தான் இறுதி தூதர் என்று நம்புவதாகவும் கூறினார்.

இஸ்லாத்தை தான் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ள வந்த அனுபவத்தை சொல்லும்போது ,ஒரு இஸ்லாமிய பேச்சாளர்க்குண்டான பாணியில் விளக்கியது ,அரங்கத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது . பின்னர் QITC யின் தலைவர் சகோதரர் ஷபீர் அவர்கள் , திரு குர்ஆன் தமிழாக்கத்தையும் , தொழுகை பயிற்சி நூலையும் வழங்கினார் . மூத்ததலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் .ஆவணங்களில் பெயர் மாற்றம் மற்றும் தேவையான உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் , கத்தர் இந்திய மையம் வழங்கும் என்று சகோதரர் மஸ்ஊத் அவர்கள் தெரிவித்தார்கள் .


அல்ஹம்துலில்லாஹ் !



நேர் வழி பெற்றோர்க்கு அவன் ( அல்லாஹ்) நேர் வழியை அதிகமாக்கி ,அவர்களுக்கு (தன்னைப்பற்றி அச்சத்தையும் )

வழங்கினான் . (திரு குர்ஆன் : சூரா முஹம்மது 47:17 )