வெள்ளி, 25 ஜூன், 2010

அகீதாவகுப்பில் முதல்ஆறு இடத்தில்தேறியவர்களுக்கு பரிசளிப்புவிழா



بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......


24-06-2010 அன்று வியாழக்கிழமை இரவு , கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் அகீதா வகுப்பில் முதல் ஆறு இடத்தில் தேறியவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது .
பரிசளிப்பு விழாவிற்கு , இஸ்லாமிய அழைப்பு மையமான சவுதி மார்கஸ் என்று அழைக்கப்படும் தாவா வல் இர்ஷாத் ன் தலைவர் சகோதரர் ஷேக் பாவாஜ் அல் காமிதி அவர்களும் , கத்தர் கெஸ்ட் சென்டர் தாளாளர் சகோதரர் ஷேக் அல் மௌலா அவர்களும் வெளிநாட்டினர்க்கான அழைப்பு மையம் பானர் என்ற அமைப்பின் , தாவா ஒருங்கிணைப்பாளர் சகோதரர் டாக்டர் அலி இத்ரீஸ் அவர்களும் , நமது மையத்தின் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்து தந்தனர்.
அகீதா வகுப்பில் 90% மதிப்பெண்கள் பெற்ற முதல் ஆறு சகோதர சகோதரிகளுக்கு , கை கடிகாரமும் , நற் சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் அகீதா வகுப்பில் கலந்து கொண்ட 62 சகோதர சகோதிரிகளுக்கு , நற் சான்றிதழ் வழங்கப்பட்டது. இது போன்று பல் வேறு தாவாப்பணிகளை வருங்காலத்தில் தவ்ஹீத் மர்கஸ் சிறப்புற நடத்திட வேண்டும் என்று வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் கூறினார்கள். அல்லாஹுவுடைய மாபெரும் கிருபையால் இக்கூட்டம் சிறப்புற நடந்தேறியது. அல்ஹம்துளில்லாஹ் !


"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"அல்குரான் 3:110