சனி, 11 செப்டம்பர், 2010

கத்தரில் ஈத் பெருநாள் கொண்டாட்டம்




கத்தரில் அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் ஈத் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது .அல் மால் எதிரில் உள்ள அலி பின் அல் முசல்மானி பள்ளியில் ஈத் பெருநாள் தொழுகை மற்றும் அரபியில் குத்பா உரைக்கு பின்னர் மௌலவி அப்துல் கரீம் MISc (பேராசிரியர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்) அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மையத்தின் தலைவர் சகோதரர் ஷபீர் அவர்கள் தலைமை வகித்தார்கள் . மூத்த தலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார்கள். மையத்தின் செயலாளர் சகோதரர் மஸ்ஊத் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.

கத்தர் வாழ் ஐநூறுக்கும் மேற்பட்ட சகோதர சகோதிரிகள் ஈகை திருநாள் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஒருவர்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இந்நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.


"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!" - அல்குரான் 3:110