ஞாயிறு, 26 ஜூன், 2011

23/06/2011 வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

இறைவனின் திருப்பெயரால்...

QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 23/06/2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு QITC செயலாளர் சகோ. M.ஷாஜஹான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
QITC அழைப்பாளர் சகோ. காதர் மீரான் அவர்கள், "சிந்திப்போம் செயல்படுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

QITC அழைப்பாளர் மௌலவி அன்சார் அவர்கள், "இஸ்லாம் கூறும் சபை ஒழுக்கங்கள்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "வீண்விரையம், ஊதாரித்தனம் தவிர்ப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 100 க்கும்மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான வாராந்திர தர்பியா நிகழ்ச்சியை, சகோ. அப்துல்கபூர் அவர்கள் நடத்தினார்கள்.

இறுதியாக அறிவிப்புகள் மற்றும் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரத்திற்கான பதில்களும் சொல்லப்பட்டன.

இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.