ஞாயிறு, 3 ஜூலை, 2011

30/06/11 QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு


இறைவனின் திருப்பெயரால்...

QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 30/06/2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு QITC செயலாளர் சகோ. A. முஹமத் இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "நன்றி பாராட்டுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

QITC அழைப்பாளர் சகோ. சபீர் அஹ்மத் அவர்கள், "வெற்றியாளர்கள் யார்?" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

QITC அழைப்பாளர் மௌலவி தமீம் அவர்கள், "திருமணம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் ஆலோசனைப்பெட்டியில் போடப்பட்ட 3 மார்க்க கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.

 

இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான வாராந்திர தர்பியா நிகழ்ச்சியை சகோ. அப்துல்கபூர் அவர்கள் நடத்தினார்கள்.

இறுதியாக அறிவிப்புகள் மற்றும் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.

இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.