சனி, 6 ஆகஸ்ட், 2011

04-08-2011 கத்தர் - வக்ராவில் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.
அல்லாஹ்வின் அருளால், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக 04/08/2011 வியாழன் இரவு 9:30 மணிக்கு அல் வக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில் ரமலான் சிறப்பு ஸஹர் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மௌலவி முஹம்மத் தாஹா MISc (பேராசிரியர், தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி, சேலம்) அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் உலகம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
சவுதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி அப்துஸ் ஸமத் மதனி அவர்கள் சென்ற ரமளானில் இருந்தவர்கள் எங்கே? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
QITC அழைப்பாளர் மௌலவி அன்ஸார் மஜ்தி அவர்கள் உறவுகள் - ஓர் அலசல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


சிறுவர், சிறுமியர்களுக்கான அறிவுப்போட்டி
முன்னதாக சிறுவர், சிறுமியர்களுக்கான அறிவுப்போட்டி (மனனம் மற்றும் பேச்சுப்போட்டி) நடைபெற்றது.



QITC பொதுச்செயலாளர் மௌலவி முஹம்மத் அலி அவர்கள் நடத்திய இப்போட்டியில் 20 க்கும் அதிகமான சிறுவர் சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். அவர்கள் அனைவருக்கும் QITC சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் இன்ஷாஅல்லாஹ் அடுத்த நிகழ்ச்சியில் வழங்கப்படும்.
 
QITC துணைப் பொதுச்செயலாளர் ஃபக்ருத்தீன் அவர்கள் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.
QITC தலைவர் டாக்டர் அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் செய்ய, QITC துணைப் பொருளாளர் இல்யாஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியாக அனைவருக்கும் சஹர் உணவு பரிமாறப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.