செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

30-08-2011 கத்தரில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் சொற்பொழிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.

இறைவனின் உதவியால், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் QITC சார்பாக ஈதுல் ஃபித்ர் பெருநாள் சொற்பொழிவு 30-08-11 அன்று காலை 6:00 மணிக்கு பெருநாள் தின குத்பாவிற்குப் பிறகு தோஹா அலி பின் அலி பள்ளியில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு QITC தலைவர் டாக்டர் அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையேற்று ஈத் பெருநாள் தரும் படிப்பினை பற்றி துவக்கவுரையாற்றினார்கள்.


சிறப்புரையாக "இறையச்சம் - சிறியவர் முதல் பெரியவர் வரை" என்ற தலைப்பில் மௌலவி முஹம்மத் தாஹா MISc (பேராசிரியர், தவ்ஹீத் இஸ்லாமியக்கல்லூரி, சேலம்) அவர்கள் உரையாற்றினார்கள் (வீடியோ).

மேலும் QITC செயலாளர்  மௌலவி முஹம்மத் அலி MISc அவர்கள் QITC-யின் செயல்பாடுகள் குறித்து விளக்கி நன்றியுரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.