ஞாயிறு, 22 ஜனவரி, 2012

19-01-2012 கத்தர் மண்டல மர்கசில் [QITC] வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கசில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 19-01-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:15 மணி வரை மண்டல துணை பொருளாளர் சகோ. இலியாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக கத்தர் கெஸ்ட் சென்டர் அழைப்பாளர் சகோதரர். ஷாஜஹான் அவர்கள், "இஸ்லாத்தில் புதிய வரவுகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக கத்தர் இந்திய தவ்ஹீத் மைய அழைப்பாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள், "புரிந்துணர்வு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக கத்தர் இந்திய தவ்ஹீத் மைய அழைப்பாளர் மௌலவி, அன்சார் அவர்கள், "இறையச்சம்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.