திங்கள், 30 ஜனவரி, 2012

கத்தர் மண்டல மர்கசில் (QITC) வாராந்திர பயான் நிகழ்ச்சி - 26/01/2012

அல்லாஹ்வின் பேரருளால்,


கத்தர் மண்டல மர்கசில் (QITC) வாராந்திர பயான் நிகழ்ச்சி 26/01/2012 வியாழன் இரவு 8:30 மணிக்கு மண்டல துணைத்தலைவர் சகோதரர். ஜியாவுத்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக கத்தர் கெஸ்ட் சென்டர் அழைப்பாளர் சகோதரர். ஷாஜஹான் அவர்கள், "குர்ஆனில் தடுக்கப்பட்டவைகளில் சில" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக கத்தர் இந்திய தவ்ஹீத் மைய அழைப்பாளர் மௌலவி. முஹம்மத் அலீ M.I.Sc. அவர்கள், "புரிந்துணர்வு" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.


இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும், இரவு உணவிற்குப் பின், இலங்கை சகோதரர்களுக்கான தாவா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.