திங்கள், 20 பிப்ரவரி, 2012

QITC மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 16-02-2012

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கசில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 16-02-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள், "காலத்தை கணக்கெடுப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக QITC அழைப்பாளர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம். அவர்கள், "விருந்தோம்பல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சவுதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி. அப்துஸ் ஸமத் மதனி அவர்கள், "இஸ்லாத்தின் பார்வையில் கேள்விகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள். மேலும் கடந்த மாதங்களில் இதுபோன்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சகோதர-சகோதரிகளில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, சவுதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி. அப்துஸ் ஸமத் மதனி அவர்கள் QITC சார்பில் பரிசுகள் வழங்கினார்கள்.






QITC துணைத்தலைவர் முஹம்மத் அலி ஜியாவுத்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர - சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.