ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

27-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் "பெண்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி"

அல்லாஹுவின் அருளால், 

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  (QITC)  சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில், பெண்களுக்கு பெண்களே நடத்தும் "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி",  மண்டல [QITC] மர்கசில் 27-04-2012 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை  நடைபெற்றது.

ஆரம்பமாக, சகோதரி. கதீஜத்துல் நூரியா அவர்கள் "அல்லாஹுவின் மீதே பூரண நம்பிக்கை வைப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, சகோதரி. அஷ்ரஃப்  நிஷா அவர்கள்  "இஸ்லாத்தில் திருமணம்" என்ற தொடர் தலைப்பில் "குடும்பத்தில் பெண்களுக்குரிய பொறுப்புகள்" பற்றி உரையாற்றினார்கள்.

சகோதரி. வஜியத் நிஷா அவர்கள்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட  சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.