திங்கள், 2 ஏப்ரல், 2012

30-03-2012 அன்று நடைபெற்ற மாதாந்திர பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி

அல்லாஹுவின் பேரருளால்,

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பெண்களுக்கான பெண்களே நடத்தும் "பயான் நிகழ்ச்சி", தோஹா QITC மர்கசில் 30-03-2012 அன்று மாலை 7:00 மணிக்கு நடைபெற்றது.

சகோதரி அஷ்ரஃப் நிஷா அவர்கள் "இஸ்லாத்தில் திருமணம்" என்ற தலைப்பில் திருமணங்களில் நடக்கும் நபி வழிக்கு மாற்றமான தவறான காரியங்களை சுட்டிக்காட்டி உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரிகளும், சிறுமிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.