ஞாயிறு, 6 மே, 2012

03-05-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 03-05-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை இணைச்செயலாளர் சகோதரர். வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர். தஸ்தகீர் அவர்கள் "பாவ மன்னிப்பு" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி, அன்ஸார் அவர்கள் "அங்கீகரிக்கப்படாத பிரார்த்தனைகள்"  என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள். 

இறுதியாகஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ்ஸமத்  மதனீ அவர்கள்  "குற்றவாளிகளின் அடையாளங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறிசென்ற மாத பயான் வினா-விடையில், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.