ஞாயிறு, 6 மே, 2012

04-05-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி

அல்லாஹுவின் பேரருளால்,
கத்தர் மண்டல மர்கஸில் [QITC] 04-05-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை, வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" பத்தாவது வகுப்பு நடைபெற்றது.

ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் அவர்கள் இவ்வகுப்பில் "வருங்கால வினைச்சொற்களின்" பல்வேறு வடிவங்களைக் குறித்து விரிவாக பாடம் நடத்தினார்கள்.

இதில், இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும்மர்கஸில்இதே நேரத்தில் தொடர்ந்து நடைபெறும்.