ஞாயிறு, 10 ஜூன், 2012

08-06-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்

அல்லாஹ்வின் பேரருளால்,

வழமையாக நடைபெறும் கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம், மண்டல மர்கசில் [QITC] 08-06-2012 வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணி முதல் 11:30 மணி வரை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மண்டல நிர்வாகம், மர்கஸ் பராமரிப்பு, ரமதான் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு, மண்டல பொதுக்குழு கூட்டுதல், ரமதான் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கூட்டுதல், மாநில செயற்குழுவிற்கு கருத்துக்கள் தெரிவித்தல், கத்தர் அரசு இஸ்லாமியத் துறையின் புதிய நிபந்தனைகள் மற்றும் இதர அழைப்புப் பணிகள் சம்பந்தமான பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்பது நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.