திங்கள், 18 ஜூன், 2012

15-06-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்

அல்லாஹ்வின் பேரருளால்,

வழமையாக நடைபெறும் கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம், மண்டல மர்கசில் [QITC] 15-06-2012 வெள்ளிக்கிழமை மாலை 7:40 மணி முதல் 9:40 மணி வரை, தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மண்டல நிர்வாகிகளின் வருகைப்பதிவேடு, இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் மண்டல பொதுக்குழுவிற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு, ரமளானில் அன்றாடம் நோன்பு திறக்க ஏற்பாடு செய்யவேண்டிய உணவு மற்றும் இதர அழைப்புப் பணிகள் சம்பந்தமான பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஆரம்பமாக, துணைச் செயலாளர் சகோதரர்.சாக்ளா அவர்கள் "சோதனை" என்ற தலைப்பில் சிற்றுரை ஆற்றினார்கள்.

இக்கூட்டத்தில் பத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.