ஞாயிறு, 24 ஜூன், 2012

21-06-2012 கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 21 -06-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை இணைச் செயலாளர் சகோதரர்.வக்ரா .ஃ பக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் "பாதிக்கப்பட்டவன் நடந்துகொள்ளும் முறை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டல அழைப்பாளர் மௌலவி.லாயிக் அவர்கள் "உள்ளம் சீர்பட இஸ்லாம் கூறும் சில விதிகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ் சமத் மதனீ அவர்கள் "சிறிய வேலை பெரிய கூலி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல இணைச் செயலாளர் வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு என்ற ஊரைச் சேர்ந்த இரத்தினவேல் என்ற சகோதரர் சத்திய மார்க்கமான இஸ்லாத்தில் இணைய விருப்பம் தெரிவித்து இஸ்லாமிய மார்க்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் அவருக்கு, சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ் சமத் மதனீ அவர்கள் சகாதா கலிமாசொல்லிகொடுத்தார்கள். இரத்தினவேல் என்ற தனது பெயரை முகமது அப்ஸல் என்று மாற்றிக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.