ஞாயிறு, 24 ஜூன், 2012

22-06-2012 கத்தர் மண்டல பொதுக்குழுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்தின்,கத்தர் மண்டல பொதுக்குழுக் கூட்டம்,மண்டல மர்கஸ் உள்ளரங்கத்தில்,22-06-2012 வெள்ளியன்று மாலை 7:00 மணி முதல் 9:30 வரை நடைபெற்றது.

மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையேற்று "வரவேற்புரை" நிகழ்த்தினார்கள்.

அடுத்து,சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "அழைப்புப் பணியின் அவசியம்" என்ற தலைப்பில் அதன் முக்கியத்துவம், கொள்கை உறுதி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்தின் நிலைபாடு மற்றும் மறுமை வெற்றி ஆகியவற்றை உள்ளடக்கி, விளக்கமாக உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "மண்டல நிர்வாகத்தில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்களை" குறிப்பிட்டு, பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்றார்கள்.

அடுத்து,மண்டல செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ M.I.Sc., அவர்கள் "மண்டல மர்கசின் ஆண்டறிக்கையை" விளக்கி கூறினார்கள்.

பின்பு,மண்டல பொருளாளர் சகோதரர்.முஹம்மத் இலியாஸ் அவர்கள் "மண்டல மர்கசின் நிதி நிலை அறிக்கையை" புள்ளி விவரங்களுடன் கூறினார்கள்.

அடுத்து,உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தங்களது "கருத்துக்களையும்-ஆலோசனைகளையும்" கூறினார்கள்உறுப்பினர்களது கேள்விகளுக்கு மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் மற்றும் மண்டல செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ M.I.Sc. ஆகியோர் பதிலளித்தார்கள்.

இறுதியாக,மண்டல துணைச் செயலாளர் சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் "நன்றியுரை" நவின்றார்கள்.

வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!