ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

QITC நடத்திய "ஈதுப் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" FANAR - 2012

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 19/08/2012 அன்று நாயிற்றுக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய "ஈதுப் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" FANAR உள்ளரங்கில் காலை 7:00 மணி முதல் 8:30 மணிவரை மண்டல செயலாளர் சகோதரர். M.முஹம்மத் அலி M.I.Sc அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக சகோதரர். .M.முஹம்மத் அலி M.I.Sc அவர்கள் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தையும் தொண்டரணி சகோதரர்கள் ஆற்றிய பணிகள் மற்றும் அவர்களுக்கு நன்றியினை கூறினார். பின்னர் அவர்களுக்கு தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் M.I.Sc அவர்களால் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது. 

பின்னர் சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் M.I.Sc அவர்கள் "அமல்களின் முக்கியத்துவம்!" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அதில் "நீங்கள் அனைவரும் இங்கு தான் குடும்பத்துடன் வசிக்க உறுதியான எண்ணம் கொள்ளுங்கள். அல்லாஹ் அதற்கான வழிகளை ஏற்படுத்துவான்" என்று கூறியது மக்கள் மனதை நெகிழவைக்கும் வண்ணம் அமைந்தது (வீடியோ).

பின்னர் மண்டல துணை செயலாளர் சகோதரர். தஸ்தகீர் அவர்கள் நன்றியுரை கூறினார்கள். இந்நிகழ்ச்சியில் 550-க்கும் அதிகமான சகோதர, சகோதரிகள், சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. உணவுக்கான ஏற்பாட்டினை உணவுக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். தொண்டரணியினர் வாகனங்களை சரியாக நிறுத்தவும், நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவும் ஒத்துழைப்பு நல்கினார்கள். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!