ஞாயிறு, 14 அக்டோபர், 2012

12-10-2012 கத்தர் மண்டல மர்கசில் "சிறப்பு ஆலோசனைக் கூட்டம்"

அல்லாஹ்வின் பேரருளால், 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கசில் [QITC] ,ஹஜ்ஜுப் பெருநாள் நிகழ்ச்சிகள் குறித்த "சிறப்பு ஆலோசனைக் கூட்டம்", 12-10-2012 வெள்ளி இரவு 7:30 மணி முதல் 10:00 மணி வரை தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டல தலைவர் ,டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "கூட்டத்தின் முக்கியத்துவம்" குறித்து உரையாற்றினார்கள்.

தொடர்ந்து,மண்டல அழைப்பாளர் மௌலவி,முஹம்மத் தமீம்,M.I.Sc., அவர்கள் "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்தின் அரும்பணிகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக கத்தர் கெஸ்ட் சென்டர் அழைப்பாளர் சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள், "மாற்று மதத்தாரை மாற்றுங்கள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

பின்பு ,மண்டல த'அவாக்குழு உறுப்பினர் சகோதரர்.மஸ்ஊத் அவர்கள் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு பிற மதத்தாரை எப்படி அழைப்பது?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc. அவர்கள் அறிவிப்புகள் பல செய்ய, இறுதியாக துணைப் பொருளாளர் சகோதரர்.காதர் மீரான் அவர்கள் "நன்றியுரை" நவின்று நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.


=========================================================================
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/