ஞாயிறு, 4 நவம்பர், 2012

02-11-2012 தோஹா "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" நிகழ்ச்சி

அல்லாஹுவின் அருளால், 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலம், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" நிகழ்ச்சி 02-11-2012 வெள்ளி மாலை 5:45 மணி முதல் 9:15 மணி வரை, தோஹா கத்தர் அரசு இஸ்லாமிய கலாச்சார மைய கேட்போர் கூடத்தில் (FANAR), நடைபெற்றது.

இதில், பிற மத சகோதர-சகோதரிகளின் கேள்விகளுக்கு தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. முஹம்மத் அல்தாஃபி அவர்கள் பதில் அளித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், 18 முஸ்லிம் அல்லாத பிற மத சகோதர-சகோதரிகள், இஸ்லாத்தின் கடவுள்கொள்கை, மறுமணம், பெண்ணடிமைத்தனம், குற்றங்களுக்கான கடுமையான தண்டனை, முஸ்லிம் மக்களிடம் உள்ள மூட பழக்க வழக்கங்கள், பிராணிகள் வதை, குர்'ஆனில் உள்ள அறிவியல் அத்தாட்சிகள், தாடி, கத்னா, க'அபா வழிபாடு, பெண்கள் கல்வி, முதலில் தோன்றிய மதம் எது?, மறு பிறவி உண்டா? என்பன போன்ற சந்தேகங்களை வெளிப்படையாகவும், எந்தவித தயக்கங்கள் இன்றியும் கேள்விகளாக கேட்டு, இதை ஒரு மத நல்லிணக்கத்திற்கு வழிவகை செய்யும் நிகழ்ச்சியாகவும் மாற்றிக்காட்டினார்கள்.

வந்திருந்த அனைத்து பிற மத சகோதர-சகோதரிகளுக்கும் கத்தர் மண்டலம் சார்பாக "குர்'ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம், அர்த்தமுள்ள கேள்விகள் - அறிவுப்பூர்வமான பதில்கள் புத்தகம், Prophet Muhammad - The Greatest Man புத்தகம் மற்றும் தாயகத்தில் ஏற்கனேவே நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகளின் டி .வீ .டிக்கள்" ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக இந்திய-இலங்கையைச் சார்ந்த 800 க்கும் மேற்பட்ட பிறமத சகோதர-சகோதரிகளும், முஸ்லிம்களும், தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களோடு கலந்து கொண்டார்கள்.

வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.