ஞாயிறு, 30 டிசம்பர், 2012

27-12-2012 கத்தர் - அல் ஃஹோர் கிளையில் சொற்பொழிவு


அல்லாஹ்வின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம்,அல் ஃஹோர் கிளையில் இரு வாரத்திற்கொருமுறை நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சி 27-12-2012 வியாழன் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை கிளைப் பொறுப்பாளர் சகோதரர். நைனா முஹம்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில்,ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "நோயும்-நோயாளியும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.