சனி, 5 ஜனவரி, 2013

03-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,  

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 03-01-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை துணைச் செயலாளர் சகோதரர்.சாக்ளா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் "புது வருடமும் -பொய்க் கொள்கையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்து,ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர்.யூஸூஃப் அவர்கள் "ஸஃபராவது - பீடையாவது?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, மண்டல அழைப்பாளர் மௌலவி,தமீம்,M.I.Sc.,அவர்கள் "மார்க்கத்தின் பார்வையில் மரணதண்டனைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில்,தொடர்ந்து கலந்து கொண்டு,கேள்விகளுக்கு பதில்கள் எழுதி, அதிக மதிப்பெண்கள் பெற்ற சகோதர-சகோதரிகளுக்கு, மண்டல தலைவர்  டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "ஊக்கப் பரிசுகள்" வழங்கினார்கள் 

பின்பு, தலைவர்  டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்ய, தொடர்ந்து செயலாளர் மௌலவி,முஹம்மது அலீ M.I.Sc., அவர்கள் இன்றைய பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்டு  நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள்  ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.