ஞாயிறு, 13 ஜனவரி, 2013

10-01-2013 கத்தர் மண்டலத்தில் மனித நேய உதவி

அல்லாஹ்வின் பேரருளால்,


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் [QITC],  11-01-2013 வியாழன் அன்று, சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்ற, கடனை அடைக்கமுடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த, 'தமிழகம்-பெரம்பலூர்' என்ற ஊரைச் சார்ந்த, சகோதரர்.அப்துல்லாஹ் அவர்களுக்கு கத்தர் மண்டல ஜமா'அத் பண உதவி செய்தது.

இம்மனித நேய உதவியை கத்தர் மண்டல ஜமா'அத் சார்பாக கத்தர் மண்டல துணைச் செயலாளரும், இஸ்லாமிய அழைப்புப்பிரிவு பொறுப்பாளருமாகிய சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் வழங்கினார்கள்.மேலும்,அவருக்கு திருக்குர்'ஆன் தமிழாக்கம் மற்றும் பல மார்க்க விளக்க புத்தகங்களும் இலவசமாக வழங்கப்பட்டன.



அல்ஹம்துலில்லாஹ்.