திங்கள், 21 ஜனவரி, 2013

18-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி

அல்லாஹுவின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டல மர்கஸில் [QITC], 18-01-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை, வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" இருபத்து ஐந்தாவது வகுப்பு நடைபெற்றது.

ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இவ்வகுப்பில் "ஐந்து எழுத்து வினைச்சொற்கள்" வகை பாடங்களை ரிவிஷன் முறையில் நடத்தினார்கள்.

இதில், இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த சில சகோதர - சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும், இம்மர்கஸில், மஃக்ரிப் தொழுகையை தொடர்ந்து,நடைபெறும்.