சனி, 2 பிப்ரவரி, 2013

31-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 31-01-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 10:05 மணி வரை துணைச் செயலாளர் சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் சகோதரர்.வக்ரா ஃபக்ருதீன் அலீ அவர்கள் "திருக்குர்'ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக,சவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "நாயனை நினைவில் நிறுத்துவோம் " என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு,கத்தர் கெஸ்ட் சென்டர் அழைப்பாளர் சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் 'புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களிடம் நடந்து கொள்ளும் விதம்' என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்கள்.

இறுதியாக, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்ய, தொடர்ந்து மண்டல இணைச் செயலாளர் சகோதரர்.வக்ரா ஃபக்ருதீன் அலீ அவர்கள் இன்றைய பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.