சனி, 13 ஏப்ரல், 2013

கத்தர் மண்டல மர்கஸில் "வாராந்திர சொற்பொழிவு" நிகழ்ச்சி 11-04-2013

அல்லாஹ்வின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் "வாராந்திர சொற்பொழிவு" நிகழ்ச்சி 11-04-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது.

ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் சகோதரர். ஃ பக்ருதீன் அலி அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன ?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக, மண்டல அழைப்பாளர் மவ்லவி இஸ்ஸத்தின் ரிள்வான் ஸலபி அவர்கள் "சோதனையா? கொள்கை உறுதியா?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக,மண்டல அழைப்பாளர் மவ்லவி,அப்துஸ் சமத் மதனீ அவர்கள் "செல்வத்தை நல்வழியில் செலவழியுங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு , மண்டல துணைத் தலைவர் சகோதரர் .ஃ பக்ருதீன் அலி அவர்கள் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பற்றியும்,கடந்த வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் அன்றைய பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.