சனி, 27 ஏப்ரல், 2013

கத்தர் மண்டல மர்கஸில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சி 25-04-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு மற்றும் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சி 25-04-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது.

ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர். அப்துர் ரஹ்மான் அவர்கள் "சூரத்துல் பாத்திஹா வின் சிறப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

பின்னர் மவ்லவி அன்ஸார் மஜிதி அவர்கள் இரவு 9.00 மணி முதல் 10.00 மணிவரை இஸ்லாமிய சகோதர, சகோதரிகளின் தங்களின் மார்க்க சந்தேகங்களை தீர்க்கும் கேள்வி பதில் நிகழ்ச்சியான "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சியை நடத்தினார்கள். இதில் பல சகோதர சகோதரிகளின் சந்தேகங்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் நபி வழி அடிப்படையில் பதில் அளித்தார்கள்

பின்பு, மண்டல தலைவர் சகோதரர். மஸ்வூத் அவர்கள் அறிவிப்புகள் பல செய்து, கடந்த வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.