ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

கத்தர் மண்டல மர்கஸில்"பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" 26-04-2013

அல்லாஹுவின் அருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத் கத்தர் மண்டல மர்கஸில், ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் பெண்களுக்கு பெண்களே நடத்தும் மாதாந்திர "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" 26-04-2013 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெற்றது

இதில் துவக்கமாக சகோதரி பாரிசா அவர்கள் "அமல்களை கவனமாக செய்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

அடுத்ததாக சகோதரி அஷ்ரப் நிஷா அவர்கள் "உண்மையான வெற்றி எது?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் சென்ற மாதம் நடைபெற்ற மார்க்க அறிவுப்போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்த சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் 40 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டனர்

அல்ஹம்துலில்லாஹ்!