ஞாயிறு, 7 ஜூலை, 2013

சனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் ரமலான் சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி 04-07-2013


அல்லாஹ்வின் பேரருளால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத் கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில் 04-07-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை, சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மண்டல சவூதி மர்க்ஸ் அழைப்பாளர் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் "ரமலானை வரவேற்போம்" என்னும் தலைப்பில் ரமலான் தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

இதில் 50க்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்துகொண்டு தங்களுக்கு ரமலான் தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற்றுகொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.