ஞாயிறு, 7 ஜூலை, 2013

QITC மர்கஸில் "ரமலானை வரவேற்போம்" கேள்வி பதில் நிகழ்ச்சி 04-07-2013

அல்லாஹ்வின் பேரருளால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் "ரமலானை வரவேற்போம்" எனும் தலைப்பில் கேள்வி பதில் நிகழ்ச்சி 04-07-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 10:15 மணி வரை மண்டல துணைச்செயலாளர் சகோதரர் சாக்ளா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மவ்லவி முஹமத் அலி Misc அவர்கள் ரமலான் தொடர்பான மக்களிடம் சந்தேகங்களுக்குரிய கேள்விகளை கேட்டு மக்கள் பதில் சொல்லும் விதமாக நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் எதிர்வரும் ரமலான் சிறப்பு நிகழ்சிகள் குறித்த அறிவிப்புகளையும் செய்தார்கள். இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!