புதன், 21 ஆகஸ்ட், 2013

கத்தர் மண்டல QITC மர்கசில் பிற மத தாவா 15/08/2013

கத்தர் மண்டல QITC மர்கசில் 15/08/2013 அன்று மதுரை - அலங்கா நல்லூரை சேர்ந்த பிற மத சகோதரர் கார்த்திக் அவர்களுக்கு QITC யின் பிற மத தாவா குழு பொறுப்பாளர் சகோ அப்துர் ரஹ்மான் அவர்கள் ஏகத்துவம் மற்றும் நபி அவர்களைப் பற்றியும் எடுத்து கூறினார். பின்பு அச்சகோதரருக்கு மர்கஸ் சார்பாக முஹம்மத் நபி வரலாறு, திருக்குரானும் அறிவியல் சான்றுகளும் என்ற புத்தகங்களை வழங்கினார்.



அல் நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு 15/8/2013


 

அல்லாஹ்வின் பேரருளால், 


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலத்தில் ரமளானுக்கு பின் மீண்டும் வாராந்திர நிகழ்ச்சிகள் தொடங்கின. அதில் QITC சனையா கிளையான அல் நஜாஹ் கிளையில் 15-08-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 9:40 மணி வரை கிளைப்பொறுப்பாளர் சகோதரர் தாவூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

இதில் மவ்லவி எம்.முஹம்மத் அலி MISc அவர்கள் "அறியாமை என்ற இருளில் ஒலி வீசிய நபிததோழர்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதில் உமர் (ரலி ) பற்றி அவர்களின் இஸ்லாத்திற்கு முன் உள்ள வாழ்வும், அதற்க்கு பின் உள்ள வாழ்வையும் பேசினார்கள். உமர் அவர்களின் வரலாறு மனதை நெகிழவைக்கும் வண்ணம் அமைந்தது . 

இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அனைவருக்கும் இரவு உணவு பரிமாற பட்டது அல்ஹம்துலில்லாஹ் !




مركز التوحيد الهندي بقطر

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,

QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],

POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460

கத்தர் மண்டல QITC மர்கசில் நடந்த வாராந்திர நிகழ்ச்சி 15/8/2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல QITC மர்கஸில் ரமளானுக்கு பின் மீண்டும் வாராந்திர நிகழ்ச்சிகள் தொடங்கின. 15-08-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 10:00 மணி வரை மண்டல இணைச்செயலாளர் சகோதரர் ஷைக்அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்கள் "ரமலானில் நாம் பெற்ற படிப்பினை" என்ற தலைப்பிலும் அதைத்தொடர்ந்து மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் "வாரிசுரிமைச் சட்டங்கள்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அதில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமையும், சமூகத்தில் அது எப்படி பறிக்கப்படுகிறது என்பது பற்றியும் அழகாக விளக்கினார்கள் 

மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் சகோ துணை செயலாளர் தஸ்தகீர் அவர்கள் QITC மர்க்சின் எதிர்வரும் நிகழ்சிகள் குறித்த அறிவிப்புகளை செய்து நன்றியுரை கூறி நிகழ்ச்சியினை நிறைவு செய்து வைத்தார்கள். 

இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் இரவு உணவு பரிமாற பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!




திங்கள், 12 ஆகஸ்ட், 2013

QITC நடத்திய ஈதுப் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 08/08/2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று 08 /08 /2013 வியாழக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய "ஈதுப் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" FANAR உள்ளரங்கில் காலை 7:00 மணி முதல் 8:30 மணிவரை மண்டல அழைப்பாளர் சகோதரர். மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் தலைமையில்நடைபெற்றது.

துவக்கமாக சகோதரர். தஸ்தகீர் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்கள் ,பின்னர் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோதரர். கே. அப்துன் நாஸர் Misc அவர்கள் "ரமலான் ஏற்படுத்திய மாற்றம்!" என்ற தலைப்பில் அல்லாஹ்வை சஹாபாக்கள் எப்படி பயந்தார்கள் நாம் எப்படி பயப்படுகிறோம் என்ற இறையச்ச மிக்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அதில் பெற்றோர்களை பேணுவதின் முக்கியத்துவம், இறைவனை வணங்குவதின் முக்கியத்துவம் என்று பலதுணுக்குகளை கூறி பேசியது மக்களின் மனங்களை நெகிழவைக்கும் வண்ணம் அமைந்தது.

பின்னர் மண்டல செயலாளர் எம்.முஹம்மத் அலி MISc அவர்கள் மர்க்சின் வாரந்திர நிகழ்ச்சி மற்றும் பெண்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் வரும் வாரத்திலிருந்து QITC மர்கசில் தொடரும் என அறிவிப்பு செய்தார்கள். மேலும் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தையும் தொண்டரணி சகோதரர்கள் ஆற்றிய பணிகள் மற்றும் அவர்களுக்கு நன்றியினை கூறி நிறைவு செய்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் 600 -க்கும் அதிகமான சகோதர ,சகோதரிகள் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டனர். உணவுக்கான ஏற்பாட்டினை உணவுக்குழுழுவினர் சிறப்பாக செய்திருந்தனர் தொண்டரணியினர் வாகனங்களை சரியாக நிறுத்தவும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவும் ஒத்துழைப்பு நல்கினார்கள். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்!! பின்னர் வந்திருந்த அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவேற்றப்பட்டது.







QITC நடத்திய "மாபெரும் இஃப்தார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" 01/08/2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 01/08/2013 வியாழக்கிழமை அன்று கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய "மாபெரும் இஃப்தார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" கிரிக்கெட் விளையாட்டுள்ளரங்கத்தில் மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை மண்டல செயலாளர் சகோதரர். M.முஹம்மத் அலி MISc அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு பேச்சாளர் மவ்லவி கே. அப்துன் நாசர் MISc அவர்கள் "வெளிநாடுகள் வாழும் நாம்!" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

பின்னர் வந்திருந்த அனைவருக்கும் இஃப்தார் செய்வதற்காக உணவு வழங்கப்பட்டது, மக்ரிப் தொழுகை நிறைவேற்றப்பட்ட பின் மண்டல செயலாளர் சகோதரர் முஹம்மத் அலி MISc அவர்கள் எதிர்வரும் நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகளை செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் 400 க்கும் அதிகமான சனையா பகுதியில் உள்ள பேச்சுலர் சகோதரர்கள் கலந்துகொண்டனர். .வந்திருந்த அனைவருக்கும் இப்தார் உணவு பரிமாறப்பட்டது. உணவுக்கான ஏற்பாட்டினை உணவுக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். தொண்டரணியினர் வாகனங்களை சரியாக நிறுத்தவும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவும் ஒத்துழைப்பு நல்கினார்கள். 

பின்னர் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இருதியாக துணை செயலாளர் சகோதரர் தஸ்தகீர் நன்றியுரை கூறி நிறைவு செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்!!











புதன், 7 ஆகஸ்ட், 2013

பனாரில் QITC யின் ஈதுல் ஃபித்ர் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி - 2013




ஃபனாரில்  QITC யின் ஈதுல் பித்ர் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி -2013


நாள் : பெருநாள் அன்று 
நேரம் : பெருநாள் தொழுகைக்குப்பின் 7:00  மணிக்கு 
இடம் : FANAR உள்ளரங்கம் - சூக் பாலா  அருகில் 
தொழுகை நேரம் : காலை5:30 மணிக்கு


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு ...
அன்பிற்குரிய சகோதர சகோதாரிகளே !!!
 பெருநாள் தினத்தன்று பெருநாள் தொழுகை மற்றும் குத்துபாவிற்க்கு பின் சூக் ஃபாலா விற்கு அருகிலுள்ள ஃபனார் உள்ளரங்கில்  QITC நடத்தும் ஈத் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது .
அனைத்து சகோதர சகோதரிகளும் பெருநாள் தொழுகையை ஆங்காங்கே திடல்களில் தொழுதுவிட்டு ஃபனாருக்கு வந்துவிடவும்.
சிறப்புரை:
சிறப்பு விருந்தினர்
மவ்லவி கே. அப்துன் நாஸர்  M.I .Sc
(மேலாண்மைக்குழு உறுப்பினர் -TNTJ) 
எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம் 
===============================================================================
குறிப்பு :
1 .பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
2 . தங்களின் வாகனங்களை ஃபனாரின் அடித்தளத்தில் நிறுத்தும் வசதி உள்ளது. 
3 .காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
=============================================================================== 


ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

QITC நடத்திய "மாபெரும் இஃப்தார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" - 02/08/2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 02/08/2013 வெள்ளிக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சார்பாக "மாபெரும் இஃப்தார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" அல் சத் விளையாட்டு உள்ளரங்கத்தில் மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை மண்டல செயலாளர் சகோதரர் M.முஹம்மத் அலி M.I.Sc அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக சகோதரர் மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் பேசினார்கள். பின்னர் சிறப்பு பேச்சாளர் மவ்லவி கே, அப்துன் நாசர் Misc அவர்கள் "தர்மம் ஓர் கேடயம்!" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

பின்னர் வந்திருந்த அனைவருக்கும் இஃப்தார் செய்வதற்காக உணவு வழங்கப்பட்டது, மக்ரிப் தொழுகை நிறைவேற்றப்பட்ட பின் மண்டல துணை செயலாளர் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் எதிர்வரும் நிகழ்சிகள் குறித்த அறிவிப்புகளை செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான சகோதர, சகோதரிகள், சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் இப்தார் உணவுக்கான ஏற்பாட்டினை உணவுக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். தொண்டரணியினர் வாகனங்களை சரியாக நிறுத்தவும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவும் ஒத்துழைப்பு நல்கினார்கள். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இறுதியாக துணை செயலாளர் சகோதரர் அப்துர் ரஹ்மான் நன்றியுரை கூறி நிறைவு செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!






 


வியாழன், 1 ஆகஸ்ட், 2013

QITC-யின் மாபெரும் இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை 02/08/2013 அல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப்



அல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் QITC -யின்  மாபெரும் இப்தார்  சிறப்பு நிகழ்ச்சி-2013
  
நாள்    : இன்ஷா அல்லாஹ்   02/08/2013 வெள்ளிக்கிழமை 
நேரம் :   மாலை 05 : 00 மணிக்கு
இடம்  :   அல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப் உள் அரங்கம்- அல் சத்  
 
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே !!!

இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வெள்ளிக்கிழமை  02/08/2013 அன்று   மாலை 5 : 00 மணிக்கு அல் சத்  ஸ்போர்ட்ஸ் கிளப்    உள்ளரங்கத்தில்   
மாபெரும் இப்தார் சிறப்பு நிகழ்ச்சி   
நடைபெற உள்ளது. 

எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியிலும்
அதைத் தொடர்ந்துள்ள  இப்தார் உணவிலும் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு அழைக்கிறோம்.
===================================================================================
சிறப்புரை :
தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள
  
மவ்லவி .கே.அப்துன் நாஸர் M.I.Sc  
 
   
தலைப்பு :  தர்மம் ஓர் கேடயம்
           
====================================================================================குறிப்பு:  
பெண்களுக்கு  தனி இடவசதி உள்ளது .

வாகனத்தொடர்புக்கு : 
சகோ ஷேய்க் அப்துல்லாஹ் -66963393

# இப்தார்  உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.#

இந்நிகழ்ச்சிக்கு வரக்கூடிய சகோதர சகோதரிகள் கவனத்திற்கு:
அல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் நான்காவது  ( GATE  NO : 4 ) வாயிலின் வழியாக அரங்கத்திற்குள்  வரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம் , 

அல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப் எங்கு உள்ளது ? அறிந்து கொள்ள கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 
<http://maps.google.com/maps?ll=25.266839,51.484766&spn=0.018978,0.0421&t=h&z=15&vpsrc=0&lci=com.panoramio.all>

சனையா கிரிக்கெட் ஸ்டேடிய வளாகத்தில் QITC-யின் இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -1/8/2013 வியாழன்


சனையா கிரிக்கெட் ஸ்டேடிய வளாகத்தில்  QITC -யின்   இஃப்தார்  சிறப்பு நிகழ்ச்சி மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -2013
  
நாள்    : இன்ஷா அல்லாஹ்   01/08/2013 வியாழக்கிழமை  
நேரம் :   மாலை 05 : 00 மணி முதல் 9 மணிவரை 
இடம்  :  சனையா கிரிக்கெட் ஸ்டேடிய வளாகம்  காம்ப்லக்ஸ் வாசல் எண்-2

அன்பிற்குரிய சகோதரர்களே  !!!
இன்ஷா அல்லாஹ் நாளை 01/08/2013 மாலை 5 : 00 மணிக்கு கர்வா கேம்ப் பக்கத்தி உள்ள  சனையா கிரிக்கெட் ஸ்டேடிய வளாக இடத்தில்  இப்தார் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்விபதி நிகழ்ச்சி நடைபெற உள்ளது . 

எனவே அனைத்துசகோதரர்களும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியிலும்  
அதைத் தொடர்ந்துள்ள  இப்தார் உணவு மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்விபதில்  நிகழ்ச்சியிலும்  கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு அழைக்கிறோம்.
===================================================================================
உங்கள் சந்தேகங்களுக்கு  பதிலளிக்கிறார் :  
                                                                               
 மவ்லவி .கே.அப்துன் நாஸர் M.I.Sc  
(இஸ்லாமிய கல்லூரி பேராசிரியர் - TNTJ  மேலாண்மைக்குழு உறுப்பினர் )          
==================================================================================== 
வாகனத்தொடர்புக்கு : 
சகோ ஷேய்க் அப்துல்லாஹ் -66963393
# இப்தார்  உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.#

இந்நிகழ்ச்சிக்கு வரக்கூடிய சகோதரர்கள்  கவனத்திற்கு:
1. சனையா கிரிக்கெட் ஸ்டேடிய வளாகம் வாசல் எண்-2 வழியாக வரும் படி தங்களை ( GATE  NO : 2 ) அன்போடு கேட்டுக்கொள்கிறோம் , 
2. சனையா கிரிக்கெட் ஸ்டேடிய வளாகம் எங்கு உள்ளது ? அறிந்து கொள்ள கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 
https://maps.google.com.qa/maps?q=qatar+cricket+statdium