சனி, 14 டிசம்பர், 2013

கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 12/12/2013



 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 12-12-2013 வியாழன் இரவு 8.30 முதல் 10.00 மணி வரை மண்டல துணைத் தலைவர் சகோதரர் .பஹ்ருதீன் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் முதலில் மவ்லவி முஹமத் அலி Misc அவர்கள் அபூஹுரைரா (ரலி) வரலாறு எனும் தலைப்பிலும்,

அடுத்ததாக சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்கள் மறைக்கப்பட்ட வரலாறு என்னும் தலைப்பில் கிறிஸ்தமஸ் விழா துவங்கிய வரலாற்று செய்திகளை தனது உரையில் குறிப்பிட்டார்கள்.

இறுதியாக மவ்லவி இஸ்ஸத்தின் ரிள்வான் ஸலபி அவர்கள் வரதட்சணை கொடுமையும் மணிக்கொரு சாவும் எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

பின்னர் மண்டல தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் அறிவிப்புகள் செய்ய, மண்டல செயலாளர் சகோதரர் முஹமத் அலி அவர்கள் கடந்தவாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களையும் அதில் சரியான விடை எழுதிய சகோதரர் அஹ்மத் பைசல் அவர்களுக்கு மார்க்க விளக்க புத்தகங்களுக்கான பரிசு கூப்பனையும் வழங்கி இந்தவாரம் ஆற்றிய உரையிலிருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்கள்.

இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/