சனி, 21 டிசம்பர், 2013

கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 19/12/2013 வியாழக்கிழமை





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் 19-12-2013 வியாழன் இரவு 8.30 முதல் 10.00 மணி வரை மண்டல துணைச் செயலாளர் சகோதரர் சாக்ளா அவர்கள் தலைமையில் நடைபெற்றது

இதில் முதலில் டாக்டர் அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் சஹாபாக்கள் அரலாறு எனும் தொடர் தலைப்பில் "ஜாபிர் பின் அபு தாலிப்" அவர்களின் வரலாற்றை பற்றி உரையாற்றினார்கள். 

அடுத்ததாக மவ்லவி முஹமத் தமீம் அவர்கள் "கோபப்படாதீர்கள்" எனும் தலைப்பிலும்,

இறுதியாக மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் "இஸ்லாம் கூறும் பெண்களுக்கான ஹிஜாப்" எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

பின்னர் மண்டல தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் அறிவிப்புகள் செய்ய, மண்டல துணைத் தலைவர் சகோதரர் பஹ்ருதீன் அலி அவர்கள் கடந்தவாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களையும் அதில் சரியான விடை எழுதிய சகோதரர் அஹ்மத் பைசல் அவர்களுக்கு மார்க்க விளக்க புத்தகங்களுக்கான பரிசு கூப்பனையும் வழங்கி இந்தவாரம் ஆற்றிய உரையிலிருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்கள்.

இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர ,சகோதரிகள் கலந்துகொண்டனர் .அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com