செவ்வாய், 21 ஜனவரி, 2014

அல்வக்ரா கிளையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 17/01/2014

 
 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தார் மண்டலம் அல்வக்ரா கிளையின் சார்பில் பிற மத சகோதரர்களுக்கான சிறிய அளவிலான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி 17-01-2014 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.30 வரை அல்வக்ரா ஷைக் ஈத் சாரிட்டி அரங்கில் நடைபெற்றது.

மண்டல துணைத் தலைவர் சகோதரர் பஹ்ருத்தீன் அலி அவர்கள் வரவேற்புரை வழங்கி துவக்கி வைக்க மவ்லவி முஹமத் தமீம் MISc அவர்கள் சகோதரர்கள் கேட்டகேள்விகளுக்கு குர் ஆன் மற்றும் நபிமொழி அடிப்படையில் பதில் அளித்தார்கள்.

அல்வக்ரா கிளை 1 மற்றும் கிளை 2 ஆகிய பகுதிகளில் இருந்து பிறமத சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். கலந்துகொண்டு கேள்விகள் கேட்ட சகோதரர்களுக்கு அழகிய சுவர் கடிகாரம் மற்றும் ஐயமும் தெளிவும் என்ற புத்தகமும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மற்ற சகோதரர்களுக்கு ஐயமும் தெளிவும் -10, மாமனிதர் நபிகள் நாயகம் -5, மனிதனுக்கேற்ற மார்க்கம் -3, குர் ஆன் கூறும் ஓர் இறைக்கொள்கை -3 ஆகிய நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது. கலந்துகொண்ட அனைவருக்கும் தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அல்வக்ரா 1 மற்றும் 2 கிளை சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தனர். பிற மத தாவா ஒருங்கிணைப்பாளர் சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் நன்றியுரை வழங்கி நிறைவு செய்து வைத்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பிற மத சகோதரர்கள் கேட்ட கேள்விகளில் சில:
பெண்கள் பர்தா அணிவது ஏன் ? 
நபிகள் பலதார மணம் செய்தது ஏன் ?
இஸ்லாமியர்கள் நான்கு திருமணம் செய்துகொள்ள அனுமதி ஏன் ?
இஸ்லாம் முதன் முதலில் இந்தியா, இலங்கையில் பரவியது எப்படி? 
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா ?
 











 
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE [QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com