ஞாயிறு, 16 மார்ச், 2014

சவுதி மர்கசில் சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி 14-03-2014



 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி 14/03 l2014 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 9.30 வரை சவுதி மர்க்ஸ் (மர்க்ஸ் தாவா வல் இர்ஷாத்) உள்ளரங்கத்தில் மண்டல தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டு நவீன உலகப் பிரச்சனைகளும்இஸ்லாம் கூறும் தீர்வும் என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் மறுமைக்காக வாழ்ந்த மகத்தான மனிதர்கள் என்னும் தலைப்பிலும், மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் மறுமையை மறக்க வைக்கும் மாடலிங் உலகம் என்னும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மண்டல மர்கசில் நடைபெற்ற பெண்கள் மார்க்க அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற சகோதரிகள் ஷமீனா பக்ருதீன், நசீமா ஹயாத் பாஷா, ஜன்னத்துல் பிர்தௌஸ், பசரியா மற்றும் ராபியத்துல் பஷீரா ஆகியோர்களுக்கு பரிசுகளை மண்டல தலைவர் மஸ்வூத் அவர்கள் வழங்கினார்கள்.
பின்னர் கத்தர் மண்டல கிளைகளில் அதிக தாவா மற்றும் சமுதாயாப் பணிகள் செய்த கிளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தாவா மற்றும் சமுதாயப்பணியில் முதலிடம் பெற்ற அல்வக்ரா 1 மற்றும் 2 கிளைகளுக்கு நூலகம் அமைக்க தேவையான அறு நூறு கத்தர் ரியால் மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது .

இரண்டாவது இடம் பிடித்த சனைய்யா கிளைக்கு ஐநூற்றி ஐம்பது கத்தர் ரியால் மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது .
மூன்றாம் இடம் பிடித்த அல்கோர் மற்றும் ராஸ் லபான் கிளைகளுக்கு ஐநூற்றி ஐம்பது கத்தர் ரியால் மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.



مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/