திங்கள், 17 மார்ச், 2014

கத்தர் மண்டல மர்கசில் பொது தர்பியா நிகழ்ச்சி 14-03-2014




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் ஜமாஅத் உறுப்பினர்கள் நிர்வாகிகள், தாயீக்கள் ஆகியோர்களுக்கான பொது தர்பியா நிகழ்ச்சி 14-03-2014 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்குப்பிறகு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தார்.

மதியம் 2 மணிக்கு தர்பியாவில் கலந்து கொள்பவர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். சரியாக 2.15 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட தர்பியா நிகழ்ச்சியில் சூனியம் குறித்து மக்களுக்கு இருக்கும் சந்தேகங்களை கேள்விகளாக கேட்கவைத்து அவற்றிற்கான பதில்களை கூறி சூனியத்தால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை திருக்குர் ஆன் வழியில் விளக்கி பயிற்சி அளித்தார்.

அடுத்ததாக நபித்தோழர்களை பின்பற்றலாமா ? என்பதற்கு அல்லாஹ்விடம் இருந்து வந்த வஹியை மட்டும் தான் பின்பற்றவேண்டும் என்பதற்கு திருக்குர் ஆன் மற்றும் நபிவழிகளின் அடிப்படையில் பயிற்சி அளித்தார்.

கலந்துகொண்டவர்களுக்கு சூனியம், நபித்தோழர்களும் நமது நிலைமையும் அடங்கிய கையேடு வழங்கப்பட்டது. தர்பியா நிகழ்ச்சி மாலை 5.30 மணிக்கு நிறைவுபெற்றது. கலந்துகொண்டவர்களுக்கு மதிய விருந்து பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/