ஞாயிறு, 5 அக்டோபர், 2014

ஃபனாரில் கத்தர் மண்டல ஹஜ் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி 04-10-14


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 04-10-214 அன்று ஹஜ் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி பெருநாள் தொழுகைக்குப்பிறகு காலை 7 மணி முதல் 8.30 மணி வரை கத்தர் மண்டலம் ஃபனார் உள்ளரங்கில் மண்டல தலைவர் சகோதரர் மஸ்வூத் தலைமயில் நடைபெற்றது.

இதில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள சிறப்பு அழைப்பாளர் சகோதரர் அஷ்ரப்தீன் ஃபிர்தௌசி அவர்கள் "மனிதனை வாழ வைக்கும் மார்க்கம் இஸ்லாம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் இன்று உலகம் முழுவதும் மீடியாக்களால் இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான தகவல்களையும், இஸ்லாமியர்கள் செய்யும் மனித நேய பணிகளையும், தாயகத்தில் ஒருமாத காலம் நாம் செய்யவிருக்கின்ற தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் குறித்த தகவல்களையும், கத்தர் மண்டலம் முழுவதும் 6 இடங்களில் நடத்த உள்ள ஒரு மாத கால சிறப்பு இரத்த தானம் குறித்த தகவல்களையும் சுட்டி காட்டி இஸ்லாம் மனிதனை வாழ வைக்கின்ற மார்க்கம்தான் என்பதை தெளிவுபடுத்தினார்கள்.

மேலும் அக்டோபர் 15முதல் நவம்பர் 16 ஒருமாத கால இரத்த தானம் நடைபெற உள்ள இடங்கள் குறித்த தகவல்களை மண்டல செயலாளர் மவ்லவி முஹமத் அலி MISC அவர்கள் அறிவிப்பு செய்து நன்றி உரை ஆற்றினார்கள்.

இதில் 600 க்கும் மேற்ப்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.


















مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com