ஞாயிறு, 17 ஜனவரி, 2016

15/01/2016 அன்று QITC மர்கஸில் நடைபெற்ற மண்டல செயற்குழு கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15/01/2016 வெள்ளிக் கிழமை அன்று மதியம் 2 மணி முதல் 6 மணி வரை QITC மர்கஸில் மண்டல துணைத் தலைவர் சகோ. ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் மண்டல செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் குறிப்பாக கிளைகளின் செயல்பாடுகள் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி மண்டல பொதுச்செயலாளர் மௌலவி. முஹம்மத் அலி MISc அவர்களும் மண்டல துணைப் பொதுச்செயலாளர் சகோ. தஸ்தகீர் அவர்களும் விவரித்து கூறினார்கள்.

கிளைகளில் நடைபெறும் தாவாவிற்காக மண்டல தலைமையை அணுகுவது குறித்து மண்டல துணைச்செயலாளர் சகோ. காதர்மீரான் அவர்களும், மாற்றுமத தாவாவின் அவசியம் குறித்து மண்டல துணைச்செயலாளர் சகோ. அப்துர்ரஹ்மான் அவர்களும் எடுத்துக்கூறினார்கள்.

முன்னதாக மண்டல துணைச்செயலாளர் சகோ. சாக்ளா அவர்கள் 'மனிதநேயமும் நமது தியாகமும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும், திருச்சியில் 31-01-2016 அன்று நடைபெறவிருக்கும் "ஷிர்க் ஒழிப்பு மாநாடு" பணிகள் பற்றியும், அதற்கான நமது பங்களிப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இறுதியாக குறைநிறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இதில் ஏராளமான செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.