வியாழன், 14 டிசம்பர், 2017

08/12/2017 அன்று நடைபெற்ற QITC யின் மாபெரும் இரத்த தான முகாம்


அல்லாஹ்வுடைய அருளால் வெள்ளிக்கிழமை 08/12/2017 அன்று QATAR NATIONAL DAY யை முன்னிட்டு QITC யின் கத்தர் மண்டலத்தின் சார்பாக மாபெரும் இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
  • இம்முகாமில் 96 சகோதரர்கள் குருதிக் கொடை அளித்தார்கள்.

  • 300 க்கும் அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!

மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்ற அடிப்படையில், இம்முகாம் சிறப்பாக நடைபெற
  • குருதிக் கொடை செய்து ஒத்துழைப்பு நல்கிய சகோதரர்களுக்கும்,

  • கிளைப் பொறுப்பாளர்கள்,

  • கொள்கை சொந்தங்கள்,

  • உணவுக் குழு, வாகனக் குழு, செயல்வீரர்கள்,

  • மற்றும் கலந்துகொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும்
எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

JAZAKALLAHU KHAIRA

இம் மகத்தான உயிர்காக்கும் பணியில் நம் அனைவரையும் பங்கு கொள்ளச்செய்து, நற்கூலிகளை வாரிவழங்கி நம்பாவங்களை மன்னிக்க காத்திருக்கும் அகில உலக அதிபதி அல்லாஹ்விற்கு நன்றி கூறி அனைத்து புகழும் அவனுக்கே உரித்தாக்குகிறோம்

குறிப்பு:

இரத்த தான பதிவு Registration - HMC ஸிஸ்டம் டவுன் பிரச்சினையினால் மதியம் 2:00 PM முடிந்துவிட்டது. அதன்கராணத்தினால் இரத்த தானம் செய்ய வந்த ஏராளமான சகோதரர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதற்கு மண்டல நிர்வாகம் மிகுந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது.

இப்படிக்கு
QITC- நிர்வாகம்
6631 6247, 55532718, 66579598, 44315863
தேதி: 08-12-2017








சனி, 9 டிசம்பர், 2017

திருக்குர்ஆன் முரண்பாடுகளற்ற இறைவேதம்


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

திருக்குர்ஆன் முரண்பாடுகளற்ற இறைவேதம்

இறைவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டு, அவர்கள் வழியாக மக்களுக்குக் கிடைத்ததே திருக்குர்ஆன் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என்று திருக்குர்ஆனே தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.

ஆயினும் முஹம்மது நபியால் எழுதப்பட்டதே திருக்குர்ஆன் என்று முஸ்லிமல்லாதவர்கள் பலர் நினைக்கின்றனர். இது தவறாகும்.

முரண்பாடின்மை!

பொதுவாக மனிதர்களின் பேச்சுக்களில் முரண்பாடுகள் காணப்படும். ஒருநாள், இரண்டு நாட்கள் முரண்பாடு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாகப் பேசிட இயலும். எவ்வித முரண்பாடும் இன்றி எவராலும் ஆண்டுக் கணக்கில் பேசிட இயலாது.

எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் அவரது ஐந்து வருட பேச்சுக்களை ஆய்வு செய்தால் ஏராளமான விஷயங்களில் அவர் முரண்பட்டுப் பேசியிருப்பதைக் காண முடியும்.
  • முன்னர் பேசியதை மறந்து விடுதல்

  • முன்னர் தவறாக விளங்கியதைப் பின்னர் சரியாக விளங்குதல்

  • கவலை, துன்பம் போன்ற பாதிப்புகள் காரணமாக போதுமான கவனமின்றிப் பேசுதல்

  • யாரிடம் பேசுகிறோமோ அவர்கள் மனம் கோணக் கூடாது என்பதற்காக அல்லது அவர்களிடமிருந்து ஆதாயம் பெறுவதற்காக வளைந்து கொடுத்துப் பேசுதல்

  • வயதாவதால் மூளையின் திறனில் ஏற்படும் குறைபாடுகள்

  • விளைவுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் அஞ்சி இரட்டை நிலை மேற்கொள்ளுதல்
மற்றும் இது போன்ற ஏராளமான பலவீனங்கள் மனிதர்களுக்கு இருப்பதால் முரண்பாடுகள் இல்லாத ஒருவரைக் கூட காண முடியாது.

அனால், திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறிது சிறிதாக 23 ஆண்டுகளாக மக்களிடம் போதித்தார்கள். இது அவர்களின் சொந்தக் கற்பனையாக இருந்திருந்தால், 23 வருடப் பேச்சுக்களில் ஏராளமான முரண்பாடுகள் அவர்களிடம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருக்குர்ஆனில் முரண்பாடுகள் எள்ளளவும் இல்லை.

மேலே சுட்டிக்காட்டிய பலவீனங்கள் எதுவுமே இல்லாத ஏகஇறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மட்டுமே முரண்பாடு இல்லாமல் இருக்க முடியும்.

இறைவனிடமிருந்து வந்ததால் தன்னுள் முரண்பாடு இல்லை என்று மனித குலத்துக்கு திருக்குர்ஆன் அறைகூவல் விடுக்கிறது.

அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

(திருக்குர்ஆன் 4:82)


காலத்தால் முரண்படாதது!

இதில் இன்னொரு முக்கிய அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் என்பது ஏதோ இன்று நேற்று வழங்கப்பட்ட புத்தகமல்ல. 1400 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி. 570ல் பிறந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாரண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.

இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், தனது காலத்து அறிவைக் கடந்து எதையும் அவரால் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகளும் முரண்பாடுகளும் இருப்பதை உலகம் கண்டு கொள்ளும்.

நூறு வருடங்களுக்குப் பின் என்ன நடக்கும்; என்னென்ன கண்டுபிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது என்பதே இதற்குக் காரணம்.

பல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்களுக்குப் பின் அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். சில நேரங்களில் அந்த முழு நூலுமே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி இருப்பதையும் காணமுடியும்.

ஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறைவேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை. துளி முரண்பாட்டை சுட்டிக்காட்ட இயலவில்லை.

இத்தனைக்கும் திருக்குர்ஆனைப் பொறுத்தவரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. எல்லாத் துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.

பூமியைப் பற்றியும், ஏனைய கோள்கள் பற்றியும், வானுலகம் பற்றியும் பேசும்போது, இந்த நூற்றாண்டின் மாமேதையும், வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதைவிடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.
  • அது போல் மனிதனைப் பற்றியும், மற்ற உயிரினங்களைப் பற்றியும், உயிரினங்கள் உற்பத்தியாகும் விதம் பற்றியும், இன்னும் பல விஷயங்களைப் பற்றியும் திருக்குர்ஆன் பேசுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பேசுவது போல் பேசவில்லை. இந்த நூற்றாண்டின் தேர்ந்த மருத்துவ மேதை பேசுவதைவிட அழகாகப் பேசுகிறது. தாவரங்களைப் பற்றி பேசினாலும், மலைகளைப் பற்றி பேசினாலும், நதிகளைப் பற்றி பேசினாலும், 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பேசியது போல் திருக்குர்ஆனின் பேச்சு இல்லை.

  • அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னாள் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பல விஷயங்களை குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது.

  • பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் இன்று எப்படி பேசுவாரோ அதைவிடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலச் சூழ்நிலையையும் ஒரு நேரச் சிந்திக்கும் யாரும் “இது முஹம்மது நபியின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது; முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத்தான் இருக்க முடியும்” என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்.
காலங்கள் பல கடந்தாலும், பல துறைசார்ந்த கருத்துகள் திருக்குர்ஆனில் நிறைந்திருந்தாலும் எந்த ஒன்றிலும் முரண்பாட்டைக் காட்ட முடியவில்லை என்பது எத்தனை பெரிய அதிசயம்!

இதிலிருந்தே காலம் கடந்தும் கம்பீரமாக நிற்கும் இறைவேதமாக, எவ்வித முரண்பாடும் இல்லாத ஒப்பற்ற இறைவேதமாக திருக்குர்ஆன் திகழ்கிறது என்பதை அறியலாம்.

திருக்குர்ஆன் போல முரண்பாடில்லாத ஒரு வேதப்புத்தகத்தை யாராலும் எக்காலத்திலும் கொண்டுவர முடியாது என்பதே நிதர்சன உண்மையாகும்.

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!

(திருக்குர்ஆன் 2:23)

புதன், 6 டிசம்பர், 2017

QATAR NATIONAL DAY யை முன்னிட்டு QITC யின் மாபெரும் இரத்த தான முகாம் - 08 டிசம்பர் 2017


QATAR NATIONAL DAY யை முன்னிட்டு QITC யின் மாபெரும் இரத்த தான முகாம் - 08 டிசம்பர் 2017


நாள்: வெள்ளிக்கிழமை 08/12/2017

நேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 4:00 மணிவரை Registration 

இடம்: QITC மர்கஸ்


கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே!

✍ கடந்த காலங்களில் இரத்த தான நிகழ்ச்சியில் இரத்த தானம் செய்ய வரும் சகோதரர்களுக்கு ஏற்பட்ட தாமதத்தை தவிர்க்கும் விதமாக இன்ஷா அல்லாஹ்! வெள்ளிக்கிழமை 08/12/2017 அன்று கத்தர் மண்டல "QITC-யின் மாபெரும் இரத்த தான முகாம்" காலை 8:00 மணிக்கு ஆரம்பம் ஆகும் என்பதை அறியத்தருகிறோம்.

✍ அனைத்து சகோதர சகோதரிகளும் இந்த செய்தியை தங்களின் குடும்பத்தினர்களுக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் எடுத்து கூறி அவர்களை உயிர்காக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்து நன்மைகளை அள்ளிச்செல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


To mark the Qatar National Day - 2017
QITC MASS BLOOD DONATION CAMPAIGN

Date: 08/12/2017
Timing: 8:00 am to 4:00 pm for Registration
Venue: QITC- MARKAS, Behind Ansar Gallery, THUMAMA

Dear Brothers and Sisters,

Peace Be Up On You.

You are Cordially Invited to attend our Life Saving Program "QITC-Mass Blood Donation Campaign".

Give blood Save Lifes.


குறிப்பு:

⛑ Registration: காலை 8:00 am முதல் மதியம் 4:00 pm மணி வரை மட்டும்

🍲 காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🍽 மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🚨 இரத்தம் கொடுக்க ஏதுவாக 6 பெட்களை கொண்ட வசதி மர்கஸ் உள்ளரங்கில் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது

🚌 வாகன வசதி செய்யப்பட்டுள்ளதுதொடர்புக்கு: 5585 6697, 66205277

🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது

🌔 Location Map: https://goo.gl/99yyFy


இப்படிக்கு

QITC- நிர்வாகம்
தொடர்புக்கு: 66316247, 55532718, 66579598, 44315863
தேதி: 29-11-2017


பிற மொழிகளில் இரத்ததான முகாம் நோட்டீஸ்: