வெள்ளி, 12 செப்டம்பர், 2008

சவுதி மர்கஸ் ஸகர் நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் !









11-09-2008 அன்று இரவு 10:00 அளவில் மதீனா கலிபாவில் அமைந்துள்ள சவூதி மர்கஸில் QITC யின் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. QITC யின் துணை தலைவர் சகோதரர் முஹம்மத் யூசுப் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள். முதல் சிறப்பு பயானாக " ஏகத்துவ சிந்தனையும் சமுதாய மாற்றமும் " என்ற தலைப்பில் மௌலவி முஹம்மத் அலி M.I.SC அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். தமிழகத்தில் ஏகத்துவ சிந்தனை ஏற்படுவதற்கு முன்னிருந்த நிலைமைகளையும் ஏகத்துவ பிரச்சாரத்தால் முஸ்லீம் சமுதாயம் கண்டுகொண்ட மாற்றங்களையும் எடுத்து கூறினார். பின்னர் " இறைவனிடம் பாவ மன்னிப்பு கோருதல் " என்ற தலைப்பில் சகோதரர் மௌலவி தவ்பிக் மதனீ அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். "முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி ( ஸல் ) அவர்கள் ஒவொவ்வரு நாளும் பல முறை பாவ மன்னிப்பை இறைவனிடம் கோரியிருக்கிறார்கள் . நித்தமும் பாவத்தில் ஒழன்று கொண்டிருக்கும் நாம் ஒரு நாளைக்கு எத்தனை முறை தவ்பா செய்துயிருக்கிறோம் ? " என்று தமது உரையினுடே மக்களிடம் வினா எழுப்பி பாவமன்னிப்பை இறைவனிடம் எப்படிச்செய்ய வேண்டும் என்று விளக்கினர்.
அவருடைய கணீர் குரலால் அரங்கத்தை முழுவதுமாக வியாப்பித்திருந்தார். துயில் கொள்ளும் வேளையிலே அவருடைய உரை கண்ணீரை கசிய வைத்தது.
அடுத்ததாக மையத்தின் தலைமை தாயீ சகோதரர் நஜ்முல் ஹுசைன் அவர்கள் " ரமலானில் அழைப்பு ப்பணியின் எழுச்சி " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்கள் . ரமலான் மாதம் என்பது சாதனை படைக்க வேண்டிய மாதம். இம்மாதத்தில் இயன்ற அளவு அழைப்பு செய்ய வேண்டும். மறுமை நாளில் அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த மிக ப்பெரிய பொறுப்பை பற்றி விசாரிப்பான் .நபி (ஸல் ) அவர்கள் ரமலான் மாதத்தில் அறப்போர்கள் மேற்க்கொள்வார்கள்.
மேலும் நபி (ஸல் ) அவர்கள் ரமலான் மாதத்தில் மக்களிடம்
அச்சமூட்டி எச்சரிக்கை செய்வார்கள்.
இஸ்லாமிய சமுதாயம் அழைப்பு பணியில் அக்கறையின்றிருந்ததால் தான் மேற்கத்திய முலாம் பூசப்பட்டு அறப்போர்( ஜிஹாத் ) என்ற அத்தியாயத்தை நீக்கி விட்டு திருக்குர்ஆனை திருத்தி எழதி வெளியிட்டு இருக்கிறது. இதே போல் முஸ்லிம் விரோத ஊடகங்களில் நபி(ஸல்) அவர்களின் கேலி சித்திரம் வரைந்து இஸ்லாத்தின் புனித தன்மைக்கு அவப்பெயர் ஏற்படுத்திருக்கிறது.இதிலிருந்து நாம் படிப்பினை பெறுவது இஸ்லாத்தின் கண்ணியம் காக்க வேண்டுமன்றால் தூய இஸ்லாத்தை பிற மக்களுக்கு எத்திவைக்க பாடுபட வேண்டும்.
சூரா ஹதீத்(57:25) என்ற அத்தியாயத்தில் இரும்பை இறக்கினோம் என்று இறைவன் கூறுகின்றான். இவ்வசனத்திற்கு ஆய்வை மேற்கொண்ட ஒரு கிருத்துவ அறிஞர் சொல்கிறார் இது பூமியின் மீது இரும்பாலன எரிகற்கள் வந்து வீழ்ந்ததற்கான அறிவியல் வரலாறு உள்ளது என்று கூறுகிறார்.
மேலும் அந்த அறிஞர் சொல்கிறார் " பொக்கிஷத்தின் (குர்ஆனின்) மதிப்பறியாத சமூகத்திடம்(முஸ்லீம்களிடம்) இந்த குர் ஆன் இறக்கியருளப்பட்டிருக்கிறதே?". திருமறையை ஆய்வுச்செய்ய இஸ்லாமிய அறிவியலாளர்கள் மிகக்குறைவாகவே உள்ளனர். அழைப்புப்பணி எல்லா முஸ்லீம்களின் மீது கடமையாக உள்ளது. எனவே அழைப்புப்பணி முஸ்லீம்களின் உயிர் மூச்சாக திகழவேண்டும் என்றார்.
அடுத்தாக செயலாளர் மஸ்ஊத் அவர்கள் கத்தர் வாழ் முஸ்லீம்கள் மத்தியிலும் பிற மத தமிழறிந்த மக்களிடமும் கத்தர்இந்திய தவ்ஹீத் மையம் செய்து வருகின்ற அழைப்புப்பணி பற்றி எடுத்து கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ள வந்திருக்கும் சகோதரர் இராம சுப்பிரமணியன் என்ற மாற்ற மத சகோதரரை மேடைக்கு வருமாறு அழைத்தார்.அவருக்கு மௌலவி நஜ்முல் ஹுசைன் அவர்கள் கலிமாவை சொல்லிக்கொடுத்து இராமசுப்பிரமணியன் இஸ்லாத்தை தழுவினார்.தான் தேர்ந்தெடுத்த பெயரான ரய்யான் அஹ்மத் என்ற பெயரை சூட்டிக்கொண்டார்.
சகோதரர் ரய்யான் அஹ்மத் அவர்கள் தனக்குள் இஸ்லாம் ஏற்படுத்திய தாக்கத்தை பகிர்ந்து கொண்டார்.மேலும் தன்னுடன் பணிபுரியும் சக தோழர்களின் ஏளனத்தை பொருட்படுத்தாமல் உறுதியாக தான் நின்றதாகவும் 10 நோன்பையும் நிறைவேற்றியிருக்கின்றேன் என்றும் கூறினார். இறுதியாக துணைசெயலாளர் சபீர் அஹ்மத் அவர்களின் நன்றியுரையுடன் ஸகர் நிகழ்ச்சி நிறைவுற்றது. இதில் தோஹாவின் பல பாகங்களிலிருந்தும் ஆண்கள் பெண்கள் பெருந்திரளாக வந்திருந்தனர். வருகை தந்த அனைவருக்கும் ஸகர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
துணை செயலாளர் பீர் முஹம்மத் தலைமையிலான உணவு குழு உணவை தாயாரித்து பரிமாறியது.துணை செயலாளர் அப்துல் கஃபூர் தலைமையிலான வாகன குழு கத்தரின் அணைத்து பகுதிகளுக்கும் வாகன ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தது. நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்ததற்கு அல்லாஹ்வுக்கே நன்றிகள். அல்ஹம்துலில்லாஹ்.!