சனி, 8 ஆகஸ்ட், 2009

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (அழைப்பு)



பல்வேறு சமூகங்களிடையே இணக்கத்தையும் , புரிந்துதுணர்வையும் ஏற்படுத்தவும் குறிப்பாக, தமிழகத்தில் மாற்று மதத்தவர்கள் மத்தியில் இஸ்லாத்தை பற்றி தவறான எண்ணம் கொண்டுள்ளதை அகற்றிடவும் , இஸ்லாமிய இறை கோட்பாடுகள் , தற்கால முஸ்லீம்கள் ஒழுகும் நடைமுறைகளே இஸ்லாம் போதித்தது என விளங்கி வைத்துள்ள முஸ்லிமல்லாதவர்களிடம் ,முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் போதித்த இறை மார்க்கமே கலப்பில்லாதது என அவர்களுக்கு விளங்க வைத்திடவும் , நம்முடைய களங்களில் அவர்களை அழைத்து அவர்கள் தொடுக்கும் அனைத்து ஐயங்களுக்கு அவர்கள் மனம் ஏற்று க்கொள்ளும் வகையில் விடையளித்திடவும் ,உள்ளங்களிடையே உலகம் உள்ளவும் சமாதனம் சகோதரத்துவம் எத்திவைக்கவும் , ஒரு சிறிய நம்மாலான முயற்சி தான்
" இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் " என்ற நிகழ்ச்சி .
இறைவன் நாடினால் வரும் வெள்ளியன்று பதினாலாம் தேதி, மாலை 5:30 மணிக்கு , FANAR உள்ளரங்கத்தில் நடைபெற இருக்கிறது.
கத்தர் வாழ் தமிழ் சமூகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில்
அனைவரும் தங்களுடை முஸ்லிமல்லாத சகோதரர்களை குடும்பத்தோடு அழைத்துவருமாறு அன்போடு அழைக்கின்றோம்.
இங்கே இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழை பார்வையிடவும்.

குறிப்பு:
வாகனங்கள் நிறுத்துமிடம் அரங்கத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ளது.

வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.வாகன வசதி வேண்டுவோர் ,நமது அலுவலகத்தை 4315863 / 5424109 இலக்கத்தில் முன்கூட்டியே தொடர்புகொள்ளவும்.