சனி, 12 செப்டம்பர், 2009

அல்கோர் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி






வியாழன் இரவு 10-09-2009 அன்று தோஹாவின் அடுத்த பெரிய நகரமான அல்கோர் என்னுமிடத்தில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் அல்கோர் கிளை , இந்நிகழ்ச்சியை அல்கோர் ஸ்போர்ட்ஸ் கிளப் உள் விளையாட்டு அரங்கில் ஏற்ப்பாடு செய்த்திருந்தனர். முதலாவதாக சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் " ரமலானில் தர்மம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர் மௌலவி லாயிக் அவர்கள் " பவ மன்னிப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்ததாக மௌலவி லாபிர் அவர்கள் " ரமலான் ஏற்ப்படுத்திய மற்றம் என்ன ? என்ற தலைப்பில் உரையாற்றினார் .

இறுதியாக மௌலவி முனைப் அவர்கள் இரவுத்தொழுகையின் அவசியம் என்ன ? தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியை சகோதரர் தும்பச்சி மீரான் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.


நிகழ்ச்சி ஏற்பாட்டை அல் கோர் கிளை ஒருங்கினைபாளர்களான சகோதரர் இணையத்துல்லாஹ மற்றும் சகோதரர் நூருல்அமீன் அவர்கள் முன்னின்று செய்தார்கள்.

சொற்பொழிவு இறுதியில் மௌலவி முஹம்மது அவர்களும் மௌலவி பைசல் அவர்களும் இரவுத்தொழுகை நடத்தினார்கள். சஹர் உணவு ஏற்பாட்டை சகோதரர் ஜாபர் , சகோதரர்அபுதாகிர் , சகோதரர் ஹாஜி முஹம்மது அவர்களும் சிறப்பாக செய்தார்கள்.அல்கோர் சுற்று வட்டாரத்தில் வசித்துவரும் தமிழறிந்த சகோதர்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியின் முடிவில் அல்கோரில் தமிழறிந்த அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் , பல புதிய சகோதரர்கள் தங்களும் ஜாமத்தில் இணைத்துக்கொண்டு செயல்பட அர்வமுள்ளதாக மண்டல நிர்வாகிகளிடம் கூறினர்.பஜர் தொழுகைக்கு பின்னர் அல்கோர் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சகோதரர் நவாஸ் ( பேட்டை) அவர்கள் பொறுப்பாளர் , சகோதரர் நவாஸ் ( நாகூர் ) அவர்கள் துணை பொறுப்பாளர் , சகோதரர் ஹமீது ( ராஜகிரி ) அவர்கள் துணை பொறுப்பாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய அல் கோர் கிளை தேர்ந்தெடுப்பில் , QITC தலைவர் சகோதரர் ஷபீர் அவர்களும் செயலாளர் மசூத் அவர்களும், துணை செயலாளர்கள் சகோதரர் அப்துல் கபூர் , மற்றும் ஹாஜி முஹம்மது , ஜியாவுதீன் அவர்களும் உடன் இருந்தார்கள்.



"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"
அல்குரான் 3:110