![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWED_MTwxU-kTgSaeKxiZyQAlQJkSDfmYO3bjqiCCnyjqKO5qtqgL0bhoDNwR7X5jhObz54xuQbKg3E2ELc_LyK0p9ZvdMB96BDjbZ49wyQ7temTuIhdvWSOCtFvOai5MAZieK5jv_jf_-/s320/ALKHOR+SAHOUR+PRG+009.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEPdujXdsFieTuw6F3YUv1rSb-oGW6d2ZNFwl6iQE-rSSyHqL1KwEY1LrPDHAvS9u2IHBpWYbPn0M2w6Ie_5E9Kuptth3ulNRf0nQVWO3PR-1iSklD8m7IThBfjmK1pGSimPR5r4eXyj6m/s320/ALKHOR+SAHOUR+PRG+002.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiATHv6LAyLYse945-Lj4oXtwWlDVjJANI06dyKrJSJ8RDrw6n-MEFJkk0c2M8W0zhczQmijamSHNw1mNFrDq_Z8LvGvs_bj0Uxx-ud73GkjBKQ-_h4LvCq1u_PYPc2Z5j-9_s6vhmOKCn-/s320/ALKHOR+SAHOUR+PRG+018.jpg)
வியாழன் இரவு 10-09-2009 அன்று தோஹாவின் அடுத்த பெரிய நகரமான அல்கோர் என்னுமிடத்தில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் அல்கோர் கிளை , இந்நிகழ்ச்சியை அல்கோர் ஸ்போர்ட்ஸ் கிளப் உள் விளையாட்டு அரங்கில் ஏற்ப்பாடு செய்த்திருந்தனர். முதலாவதாக சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் " ரமலானில் தர்மம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர் மௌலவி லாயிக் அவர்கள் " பவ மன்னிப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்ததாக மௌலவி லாபிர் அவர்கள் " ரமலான் ஏற்ப்படுத்திய மற்றம் என்ன ? என்ற தலைப்பில் உரையாற்றினார் .
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgq5VXugqnK6dwx02pchGptwkl8igs-enQgd-st3JbvJYQm8BKPdVbl_PF-bk_tYZy_B8QddtdIpGpO2D-_RZQjXoC70yiDZ8LgUQ5g5ExiPlHKAXhrID0lk9naxVktJdI6wA_zIhXBwXqW/s320/ALKHOR+SAHOUR+PRG+032.jpg)
இறுதியாக மௌலவி முனைப் அவர்கள் இரவுத்தொழுகையின் அவசியம் என்ன ? தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியை சகோதரர் தும்பச்சி மீரான் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirFr0yzCo2Z8A-57jvnJJHryVGt_bir_xQ6803NBxCTOwEP_cdymv03d6DTtpdWp_jXUi3YKy23Dstni7znmANwxK2WP02J7LMOmMb-Uf4erlISlfzVY7lj3q_cJ7RHd2MnPG35xhhged5/s320/ALKHOR+SAHOUR+PRG+001.jpg)
நிகழ்ச்சி ஏற்பாட்டை அல் கோர் கிளை ஒருங்கினைபாளர்களான சகோதரர் இணையத்துல்லாஹ மற்றும் சகோதரர் நூருல்அமீன் அவர்கள் முன்னின்று செய்தார்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmSDS10qK_sU0X6jWU81e6a4zkaee03S8fVsvcPYM4j40B-RPyTrQA-SyDRTMGb8t49XU5ikU0Srz3vb1IUbzcbvlSd3adFk8BdA9P_9E_hNZU1OqVTYg5mU3_NlqcgYEnU5zHfQhsWIqo/s320/ALKHOR+SAHOUR+PRG+006.jpg)
சொற்பொழிவு இறுதியில் மௌலவி முஹம்மது அவர்களும் மௌலவி பைசல் அவர்களும் இரவுத்தொழுகை நடத்தினார்கள். சஹர் உணவு ஏற்பாட்டை சகோதரர் ஜாபர் , சகோதரர்அபுதாகிர் , சகோதரர் ஹாஜி முஹம்மது அவர்களும் சிறப்பாக செய்தார்கள்.அல்கோர் சுற்று வட்டாரத்தில் வசித்துவரும் தமிழறிந்த சகோதர்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியின் முடிவில் அல்கோரில் தமிழறிந்த அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் , பல புதிய சகோதரர்கள் தங்களும் ஜாமத்தில் இணைத்துக்கொண்டு செயல்பட அர்வமுள்ளதாக மண்டல நிர்வாகிகளிடம் கூறினர்.பஜர் தொழுகைக்கு பின்னர் அல்கோர் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சகோதரர் நவாஸ் ( பேட்டை) அவர்கள் பொறுப்பாளர் , சகோதரர் நவாஸ் ( நாகூர் ) அவர்கள் துணை பொறுப்பாளர் , சகோதரர் ஹமீது ( ராஜகிரி ) அவர்கள் துணை பொறுப்பாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய அல் கோர் கிளை தேர்ந்தெடுப்பில் , QITC தலைவர் சகோதரர் ஷபீர் அவர்களும் செயலாளர் மசூத் அவர்களும், துணை செயலாளர்கள் சகோதரர் அப்துல் கபூர் , மற்றும் ஹாஜி முஹம்மது , ஜியாவுதீன் அவர்களும் உடன் இருந்தார்கள்.
"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"
அல்குரான் 3:110